காரைக்குடியை சேர்ந்த .மணிகண்டன் மதுரை அமர்வில், "செப்டம்பர் 6 முதல் 17 வரை நடைபெற உள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு விழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், விரிவான கூட்ட நெரிசல் மேலாண்மை, பொதுமக்கள் பாதுகாப்பு, மருத்துவம், சுகாதாரம், போக்குவரத்து, அவசரகால நடவடிக்கைகள் உள்ளிட்ட தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முன்கூட்டியே மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். மேலும்
மருத்துவ மற்றும் அவசரகால வசதிகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள், கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேவையான போக்குவரத்து ஒழுங்குமுறை போன்றவற்றை முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
குடமுழுக்கு விழா ஏற்பாடுகளில் பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உரிய பணி சுழற்சி முறையை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படிங்க: மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா... அன்னதானம் வழங்குவோருக்கு பறந்த அதி முக்கிய எச்சரிக்கை...!
இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு, கோவிட் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள். "மனுதாரர் கோவில் விழாக்கள் தொடர்பாக தொடர்ச்சியாக இது போன்ற மனுக்களை தாக்கல் செய்து வருகிறார். இவருக்கு அதிகபட்ச அபராத மிதித்து மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்
அரசு, கோவில் நிர்வாகம் மற்றும் அனைத்து துறையினரும் இணைந்து மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கை முறையாக நடத்த உரிய ஏற்பாடுகளைச் செய்து வருகின்றோம் என தெரிவிக்கப்பட்டது.
இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், " அரசு காவல்துறை, சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்பு துறை, தீயணைப்பு துறை, துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல துறையினரும் இணைந்து குடமுழுக்கு சிறப்பாக நடத்த நடவடிக்கை எடுத்து வருவதை குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது! மதுரையில் கர்ஜித்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி!