திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மக்களின் நீண்டகால தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, 1990 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம். பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் கல்லூரிகளில் இன்று இண்டஸ்ட்ரியல் லா என்ற பாடப்பிரிவிற்கான தீர்வு நடைபெற இருந்தது.

இதற்கான ஆயத்த பணிகள் அனைத்தும் நடைபெற்ற நிலையில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இண்டஸ்ட்ரியல் எல்லா பாடத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெரியார் பெயருடன் சாதி.. யுபிஎஸ்சி தேர்வில் சர்ச்சை கேள்வி.. வலுக்கும் கண்டனம்..!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 106 கல்லூரிகளில் நடைபெற இருந்த இண்டஸ்ட்ரியெல்லாம் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து வினாத்தாள்களை திரும்பப் பெரும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் வினாத்தாள் கசிவு தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆட்டம் ஆரம்பம்.. அடிச்சு தூக்க போகுது மழை..! கோவை, நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட்..!