பல்வேறு மாநிலங்களில் வாட்டர் பெல் என்ற திட்டம் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது ஒரு நாளில் காலை 10.30 மணிக்கு ஒருமுறையும், 11.45 மணிக்கு ஒருமுறையும், மதியம் 2.30 மணிக்கு ஒருமுறையும் என்று 3 முறை வாட்டர் பெல் அடிக்கப்படும். அந்த நேரங்களில் மாணவர்கள் கட்டாயமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

இதன் மூலமாக மாணவர்கள் சோர்வுடன் இருப்பதை தடுக்க முடியும். இந்த வாட்டர் பெல்லுக்கு 5 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்படும். கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்த திட்டம் அரசுப் பள்ளிகளில் செயல்பாட்டில் உள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் வீடு வசதி திட்டம்; மாப்பிள்ளை அவருதான் ஆனா சட்டை என்னோடது... பங்கமாக கலாய்த்த ஸ்டாலின்!!

இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளிலும் வாட்டர் பெல் திட்டத்தை கொண்டு வர உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், வாட்டர் பெல் திட்டத்தை கேரளா 2 ஆண்டுகளாக சிறப்பாக செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு வாய்மொழியாக கூறி வருகிறார்கள்.

உடல்நிலை சார்ந்து என்ன விஷயங்கள் பின்பற்ற வேண்டும் என்று ஆசிரியர்கள் கூறி வருகிறார்கள். குழந்தைகளின் உடல்நலத்தை காப்பதற்காக காலை உணவு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் வாட்டர் பெல் திட்டத்தை செயல்படுத்த விரைவில் சுற்றறிக்கை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆட்டிறைச்சிக்கு விலை நிர்ணயமா? தகவல் பலகை மட்டுமே... விளக்கம் அளித்த தமிழக அரசு!!