உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் கடந்த 15ம் தேதிதொடங்கி வைத்தார் இதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் முதல் நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் இன்று தூத்துக்குடி பிஅன்டி காலனியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 15,16,17,வார்டுகளில் உள்ள பொதுமக்களின் குறைகளை கேட்டறிதல் தொடர்பாக நடைபெற்றது.
இந்த சிறப்பு முகாமில் 43 சேவைகளுக்கு பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மகளிர் உரிமைத்தொகை ஆதார் அட்டைகள் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு மனுக்களை அளித்து வருகின்றனர். இந்த சிறப்பு முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் கீதா ஜீவன் தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான உடனுக்குடன் ஆனைகளை வழங்கினார்.
இதையும் படிங்க: சைவமா..? அசைவமா..? பீட்சா டெலிவரி பாய்ஸ்களை தடுத்து நிறுத்தி இந்து அமைப்பினர் ஆய்வு..!
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன் கூறுகையில், உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாம் மூலம் இதுவரை 6 முகாம்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் 7402 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்ற அவர், தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் முட்டைகள் நாள் தோறும் பரிசோதனைக்கு பிறகுதான் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்று கூறி உள்ளோம்.
ஆனால் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி அங்கன்வாடி மையத்தில் குழந்தைக்கு கெட்டுபோன முட்டை வழங்கியது மற்றும் அது தொடர்பான ஆடியோ வெளியாகி வைரலானது விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர் உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுள்ளார் மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றது.
தமிழக அரசுக்கு கெட்ட பெயர் விளைவிக்கும் வகையிலும் அதைபோல் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு கெட்டுபோன முட்டை வழங்கினாலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: கும்மிடிப்பூண்டியில் சிறுமி சீரழிக்கப்பட்ட கொடூரம்... உடல்நல பாதிப்பால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!