நாடு முழுவதும் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது பரவும் கொரோனா வீரியம் இல்லாதது என்று மத்திய அரசும் தமிழ்நாடு மருத்துவத்ததுறையும் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், இணைநோய் பாதிப்பு உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சிறுநீரக பாதிப்பு, நீண்ட கால சர்க்கரை வியாதி, இதய பாதிப்பு உள்ளவர்கள் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் போது தனியார் மருத்துவமனைகளில் 15 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் கொரோனா பரிசோதனையும் ஒன்று. சம்பந்தப்பட்ட நபர் திடீரென சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டால் கொரோனாவால் இறந்ததாக அறிவித்துவிடுகிறார்கள் என்றார்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளிகளில் கொரோனா பரவல் இருக்குமோ என்று பெற்றோர் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. திருச்சியில் செய்தியாள்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதற்றமடையும் அளவிற்கு கொரோனா பாதிப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் பள்ளிகளில் மாஸ்க் அணிய அறிவுறுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.எனவே அச்சுறுத்தும் அளவிற்கு பாதிப்பு இல்லாததால் யாரும் பயப்பட வேண்டாம், கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் ஐந்து நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமா?... அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
ஏற்கனவே இணை நோய் இருக்கக்கூடியவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். தற்போது பரவி வரும் கொரோனா தொற்றினால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்றும் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனினும் கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்து கொள்ளுதல், காய்ச்சல், சளி ஏற்பட்டால் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் உள்ளிட்ட வழிமுறைகள் பின்பற்றினாலே தொற்று பரவலை பெருமளவிற்கு குறைத்துவிட முடியும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர் என்றார்.
இதையும் படிங்க: #CORONA: இந்தியாவில் 4 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை... பீதியில் மக்கள்!