தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே தென்காசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற தனியார் பேருந்தும், கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு தனியார் பேருந்தும் இடைகால் அருகே உள்ள துரைச்சாமிபுரம் என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் உயிரிழந்தனர்.
இரு தனியார் பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அப்பகுதி மக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டதோடு, காவல் துறையினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக, படுகாயம் அடைந்த 40க்கும் மேற்பட்டோரில் 5 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: அதி தீவிர புயல்... மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புங்க... அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் அறிவுறுத்தல்...!
இதனிடையே, பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. இறந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் தமிழக அரசு நிவாரணத் தொகையை அறிவித்தது. அமைச்சர் KKSSR ராமச்சந்திரனை மீட்பு பணிகள் துரிதப்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த நிலையில், பேருந்து விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் KKSSR ராமசந்திரன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதையும் படிங்க: தென்காசி பேருந்து விபத்து... மனவேதனையின் உச்சம்... உயிரிழந்தவர்களுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்...!