நேற்று தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு உயர் பங்கேற்புடன் (சுமார் 84.69 சதவீதம்) நடைபெற்று முடிந்த நிலையில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று திமுக வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
தேர்தல் முடிவடைந்த உடனேயே, வாக்குச் சாவடிகளில் ஓட்டுப் போட்ட கையோடு முதல்வர் ஸ்டாலின் இந்த முக்கியமான சந்திப்பை ஏற்பாடு செய்தார். இதில் திமுகவின் அனைத்து வேட்பாளர்களும், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

ஆலோசனையின் போது, தேர்தல் பணிகளின் இறுதி நிலவரம், வாக்காளர்களின் பதிலளிப்பு, தொகுதி அளவிலான சவால்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின், வேட்பாளர்களுக்கு வழங்கிய அறிவுரைகளில், தேர்தல் விதிமுறைகளை கடைபிடித்து நடந்துகொள்ள வேண்டியதன் அவசியம், வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக கட்சியின் ஒற்றுமையைப் பேணுதல், மக்களின் நம்பிக்கையைத் தக்கவைத்தல் போன்றவற்றை வலியுறுத்துவார் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: முடிவு எப்படி வரும்னு தெரியல..! வாக்கு செலுத்திய பின் மு.க. அழகிரி கருத்து..!
மேலும், திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளையும் அவர் நேரில் பார்வையிட்டு, அங்கு வரும் அழைப்புகள் மற்றும் புகார்களைப் பற்றி விசாரிப்பார் என தெரிகிறது. இந்த சந்திப்பு, திமுகவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் கட்சியின் உள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த சந்திப்பை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: சிந்தித்து ஓட்டு போடுங்க மக்களே..! வாக்களித்த பின் கனிமொழி எம்.பி பேட்டி..!