ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் என்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இருந்து பரப்புரை செய்வதாக தெரிவித்தார். மீண்டும் திராவிட மாடல் ஆட்சிக்கு தயாரா என்று கேள்வி எழுப்பினார். ஈரோடு மேற்கு தொகுதி வேட்பாளரும் அமைச்சருமான முத்துசாமி மிகவும் அமைதியாக பேசி அனைத்தையும் சாதிக்க கூடியவர் என்று தெரிவித்தார். ஈரோடு மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை பெற்று செயல்படுத்தி காட்டியவர் என்று கூறினார். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கட்சியின் சுந்தரம் முன்பே சட்டப்பேரவையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்றும் பவானிசாகர் தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் என்று தெரிவித்தார். அவருக்கு கதிர் அறிவாளி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் செந்தில் நாதன் மக்கள் பணி செய்ய களம் காண்பதாகவும் கூட்டணி கட்சி வேட்பாளராக இருந்தாலும் மொடக்குறிச்சி மக்கள் உதயசூரியன் சின்னத்தில் பொன்னான வாக்குகளை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பெருந்துறை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தோப்பு வெங்கடாசலம் என்னும் இவரது பெயரை பெருந்துறை வெங்கடாசலம் என்று கூறும் அளவுக்கு அறிமுகமானவர் என்றும் அவரைக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அந்தியூர் தொகுதியில் போட்டியிடும் சிவபாலனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நல்லசிவம் குறித்து புகழ்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின் அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: அதிரவிடும் அரசியல் களம்... துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று வேட்பு மனுத்தாக்கல்..!!
அடுத்து பவானி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சந்திரசேகருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து ஆதரவு கொடுத்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். காங்கேயம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் சாமிநாதனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: திமுகவின் முதல் வெற்றி சைதாப்பேட்டையில் தான்... அமைச்சர் மா. சு. உறுதி..!!