தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின், 2025-ஆம் ஆண்டில் கட்சியின் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைகள், 2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராவதற்கும், கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களிடையே திமுகவின் செல்வாக்கை மேலும் விரிவாக்குவதற்கும் முக்கியமானவையாக அமைந்துள்ளன.
கட்சியின் அடிமட்ட அமைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்ப்பதற்கும், கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவதற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த முயற்சிகளின் முக்கிய பகுதியாக, அவர் திமுக நிர்வாகிகளுடன் தொகுதி வாரியாகவும், மாவட்ட வாரியாகவும் ஆலோசனைகளை நடத்தி வருகிறார். இதனிடையே, தமிழ்நாட்டு மக்களை ஒரு பொது இலக்கை நோக்கி ஒன்றிணைத்து, மாநிலத்தை வளர்ச்சி மற்றும் முன்னேற்றப் பாதையில் வழிநடத்துவதற்கு உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாக உத்தியைக் குறிக்கும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

திமுக நிர்வாகிகளுடன் தொடர்ந்து நடத்தி வரும் ஆலோசனைகள் இந்த “ஓரணியில் தமிழ்நாடு” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு செயல்படுகின்றன. இதனிடையே, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன் டூ ஒன் ஆலோசனைக் கூட்டங்கள் மூலம் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகளைப் பிரித்து, தொகுதி வாரியாக பிரச்சினைகளையும் தேவைகளையும் ஆய்வு செய்து வருகிறார்.
இதையும் படிங்க: தவெக + காங்கிரஸ் கூட்டணி... “ராகுல் காந்தியிடம் நேரடியாக கேட்போம்...” - செல்வப்பெருந்தகை ஓபன் டாக்...!
இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக தொடங்கியது. என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. தேர்தல் தொடர்பான முக்கிய வியூகங்களை முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனைகளாக கொடுப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் பணிகளை திமுக நிர்வாகிகள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும் முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தினார். பாதி கிணறு தான் தாண்டி உள்ளோம் என்றும் நாள்தோறும் எஸ் ஐ ஆர் பணிகள் தொடர்பாக நிர்வாகிகளிடம் கேட்டு அறிந்து வருவதாகவும் தெரிவித்தார். வாக்காளர் பட்டியலில் யாரும் விடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்...!! கரூர் வழக்கை சிபிஐ விசாரிக்கக் கூடாது... தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்...!