உலகம் முழுவதும் தந்தையரின் பங்களிப்பையும், அன்பையும், தியாகத்தையும் கொண்டாடும் ஒரு சிறப்பு நாள் தந்தையர் தினம். தமிழ்நாட்டில், இந்த நாளில் மக்கள் தங்கள் தந்தையருக்கு நன்றி தெரிவிக்கவும், அவர்களுடன் நேரத்தை செலவிடவும், பரிசுகள் அளிக்கவும், அல்லது அவர்களின் பங்களிப்பை பாராட்டி கவிதைகள், கடிதங்கள் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தவும் செய்கின்றனர்.

இது குடும்ப பந்தத்தை வலுப்படுத்தும் ஒரு அழகான தருணமாகும். தந்தையர் தினம் தந்தையரின் அன்பு, தியாகம் மற்றும் பங்களிப்பைப் பாராட்டும் ஒரு முக்கியமான நாள். தமிழ் கலாச்சாரத்தில், தந்தையருக்கு மரியாதை செலுத்துவது பாரம்பரியமாகவே இருந்தாலும், தந்தையர் தினம் இதை மேலும் சிறப்பாக வெளிப்படுத்த உதவுகிறது.
இதையும் படிங்க: போட்டாரு ED... ஓடி வாரேன் மோடி! உதய(நிதி)யை விடுவியுங்க...சீமான் செம்ம கலாய்

அந்த வகையில் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே, முதலமைச்சர் ஸ்டாலின், தனது தந்தை கலைஞர் கருணாநிதியை நினைவுகூர்ந்து உள்ளார். தலைவராக வழிகாட்டிய தந்தை என்று பெருமிதம் தெரிவித்தார். மேலும், தந்தையாக நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கிய தலைவர் என்றும் FATHER OF MODERN TAMILNADU என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: எங்கள பார்த்தாலே ஸ்டாலினுக்கு அல்லு...மிரட்டல் பாட்ச்சா லாம் பலிக்காது! இபிஎஸ் ON FIRE!