தமிழ்நாட்டின் நகைச்சுவைத் துறையில் என்றும் மறக்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் திருவுருவச் சிலை, சென்னையில் உள்ள கலைவாணர் அரங்க வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட வடிவில் நிறுவப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது ஒரு முக்கியமான நிகழ்வாக அமைந்தது.
இந்நிகழ்வுக்கு முன்னர், என்.எஸ்.கிருஷ்ணனின் சிலை சென்னை தியாகராய நகரில் ஜி.என்.செட்டி சாலையில் அமைந்திருந்தது. ஆனால், அவரது குடும்பத்தினரின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, 2025 ஜூன் மாதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அதை கலைவாணர் அரங்க வளாகத்திற்கு மாற்றி அமைக்க உத்தரவிட்டிருந்தார்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பெயரால் அமைக்கப்பட்ட இந்த அரங்கம், தமிழ்த் திரைப்படத் துறையின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும், கலை நிகழ்வுகளுக்கும் பயன்படுத்தப்படும் முக்கிய இடமாக விளங்குகிறது. எனவே, அவரது சிலையை இங்கேயே நிறுவுவது மிகவும் பொருத்தமானதாகவும், அவரது பங்களிப்பை மரியாதையுடன் நினைவுகூரும் வகையிலும் இருந்தது.இதன்படி, சிலை புதுப்பிக்கப்பட்டு, அழகிய வடிவமைப்புடன் கலைவாணர் அரங்க வளாகத்தில் நிறுவப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இதையும் படிங்க: MLA பழனியாண்டியை தகுதி நீக்கம் செய்யணும்... CASE போடுங்க..! ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விழாவில் கலந்துகொண்டு, சிலையைத் திறந்து வைத்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தமிழ் சினிமாவின் ஆரம்பகால நகைச்சுவை மன்னராகவும், சமூக சீர்திருத்தக் கருத்துகளை நகைச்சுவை மூலம் மக்களிடம் கொண்டு சென்றவராகவும் புகழப்பட்டவர். அவரது பாடல்கள், நாடகங்கள், திரைப்படங்கள் எல்லாமே சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை.
இதையும் படிங்க: நிருபர் மீதான தாக்குதல்... கொந்தளிக்கும் அரசியல் தலைவர்கள்..! காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கண்டனம்..!