உங்க கனவை சொல்லுங்க நிகழ்ச்சி நிறைவு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மகாகவி பாரதியாரின் கவிதையுடன் தொடங்கினார். வரலாற்றில் மிக மிக முக்கிய நாளாக இன்றைய நாள் அமையப்போகிறது என்று தெரிவித்தார். எதிர்கால தமிழ்நாட்டையும் மனதில் வைத்து 2030 கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சி நடைபெறுவதாக தெரிவித்தார். மண்ணும் மக்களும் மாநிலமும் பயன்பெற தேவையான திட்டங்களை உருவாக்கவே உங்களை அழைத்துள்ளேன் என்று தெரிவித்தார்.
ஒவ்வொரு துறையிலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் அரசு பணியாற்றியதாகவும் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இன்றைய தினம் முக்கிய நாளாக அமையும் எனவும் உறுதிப்பட தெரிவித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு அர்ப்பணிப்புடன் பணியாற்றி இருப்பதாகவும் ஒவ்வொரு துறையிலும் மலையளவு சாதனை படைத்திருப்பதாகவும் கூறினார். மக்களின் மகிழ்ச்சி தான் நான் மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம் என்றும் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி காட்ட வேண்டும் என்ற கனவு இருந்ததாகவும் தெரிவித்தார்.

திராவிட மாடல் அரசு ஒவ்வொரு துறையிலும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்று இருப்பதாகவும், அர்ப்பணிப்புடன் திமுக அரசு செயல்படுத்திய திட்டங்கள் தமிழ்நாட்டை முன்னிட்டு இருப்பதால் மக்கள் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் கூறியுள்ளார். சில திட்டங்களில் அரசியல் மற்றும் நிதி நெருக்கடி போன்ற முட்டுக்கட்டைகள் இருந்ததாகவும் குறிப்பிட்டார். அடுத்ததும் திமுக அரசு தான் என்றும் திராவிட மாடல் 2.0 அரசுக்கான ட்ரெய்லர் தான் இந்த நிகழ்ச்சி எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: களைகட்டிய ராட்சசபா தேர்தல்... பரிசீலனை பணிகள் மும்முரம்..!! திமுக உறுப்பினர்களின் மனுக்கள் ஏற்பு..!!
திராவிடம் மாடல் திட்டங்களால் பயனடையாத குடும்பங்களே கிடையாது என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களுக்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டிருப்பேன் என்றும் இதுதான் வெற்றி என்ற ரகசியம் எனவும் கூறினார். ஆட்சிக்கு வரும்போது இத்தனை திட்டங்களை நிறைவேற்ற முடியுமா, மக்களிடம் செல், மக்களிடம் வாழ், மக்களிடம் கற்றுக்கொள் என்ற அடிப்படையில் திட்டங்கள் நிறைவேற்ற இருப்பதாகவும் கூறினார். மேலும் பல திட்டங்களை நிறைவேற்றி இருக்கலாம் என்றும் ஆனால் சதி திட்டங்களால் அது முடியாமல் போனதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவே வியந்து பார்க்கும் கனவு ஆட்சி... முதல்வர் ஸ்டாலினுக்கு டிஆர்பி ராஜா புகழாரம்..!!