சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேருரை ஆற்றினார். உலகளாவிய திறன் மையத்தின் தலைநகராக தமிழ்நாடு திகழ்கிறது என்று பெருமிதம் தெரிவித்தார். தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும் தொலைநோக்கு பார்வை கொண்டவர் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் என்று கூறினார்.
தமிழ்நாடு நவீனத்தை நோக்கிய பாய்ச்சலுடன் தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுகிறது என்றும் தமிழகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சி பயணத்தில் இது முக்கியமான தருணம் என்றும் தெரிவித்தார். தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ்நாடு பிற மாநிலங்களை விட முன்னிலையில் உள்ளது என்றும் கூறினார். தமிழகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சி பயணத்தில் இது முக்கியமான தருணம் என்று கூறினார்.

தொழில்நுட்பத்தை சமூக முன்னேற்றத்திற்கான கருவியாக பார்க்க வேண்டும் என்றும் 32 மாவட்டங்களில் இருந்து மென்பொருள் ஏற்றுமதி நடப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரம் கூறுவதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டின் தொழில்நுட்ப பயணத்திற்கு இன்று நடைபெறும் தகவல் தொழில்நுட்ப மாநாடு சிறப்பு சேர்க்கும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு தொகுப்பு பணி மும்முரம்... முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்பிப்பு..!
திராவிட மாடல் ஆட்சிக்குப் பின்னர் தான் தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப மாநாடுகள் நடத்தப்படுகிறது என்றும் சாதாரண மக்களுக்கும் தொழில்நுட்பம் சென்று சேர வேண்டும் என திட்டங்களை வகுத்தவர் கலைஞர் கருணாநிதி எனவும் தெரிவித்தார். திராவிட மாடல் ஆட்சி என்றால் என்னவென்று மத்திய அரசு கேட்கும் கேள்விக்கு அவர்கள் வெளியிடும் வளர்ச்சி தரவுகளே பதில் என்றும் ஆற்றல் மிக்க மனித வளம் தான் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: VERY SORRY… மத உணர்வை தூண்டி குளிர் காய முடியாது… முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்..!