இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழ்நாட்டில் நீதிக்கட்சி ஆட்சியில் அமைக்கப்பட்டது தான் அறநிலையத் துறை. அப்படி நீதிக்கட்சி வழியில் வந்த திராவிட இயக்கத்தின் வழியில் ஆட்சி செய்ததாக சொன்ன எடப்பாடி பழனிச்சாமி இப்படி பேசுவது, அவர் என்ன நிலைப்பாட்டுக்கு மாறிக் சென்றுள்ளார் என்பதை இதை காட்டுகிறது.

அவர் வெள்ளை வேஷ்டியை கழட்டிவிட்டு, காவி பேண்ட் போட வேண்டிய நிலைக்கு மாறி விட்டதை காட்டுகிறது. கோயிலு நிதி மட்டுமல்ல. எந்த வழியில் வந்த நிதியாக இருந்தாலும் அதைv கல்விக்காக பயன்படுத்துவதில் தவறில்லை.
இதையும் படிங்க: என்னது 2026ல் விஜய் தான் முதல்வரா..!! படத்தில் வந்த பரபரப்பு போஸ்டர்.. ஷாக்கில் ரசிகர்கள்..!
அது மக்கள் நிதி. மக்களுக்கு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.கோயிலுக்கு வருகின்ற பக்தர்களும் எல்லோரும் விரும்புவது எதிர்காலத்தில் வருகின்ற தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என்பதே. எனவே அவர்களுடைய கல்விக்காக அந்த நிதியை செலவிடுவதில் தவறல்ல. வேறு தவறான வழிக்கு, செயல் படுத்தப்படவில்லை.

இது குறித்து பல விவாதங்கள் ஏற்கனவே வந்துள்ளது அப்போதெல்லாம் வாய் திறக்காத எடப்பாடி பழனிசாமி தற்போது வாய் திறப்பது அவர்களுடைய டெல்லி எஜமானர்கள் பேச சொல்லி இருக்கிறார்கள். அதனால் அவர் பேசுகிறார். மக்கள் மத்தியில் அவரது உண்மை முகம் வெளிப்படுகிறது. அதற்கான விளைவை அவர் சந்திப்பார் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஏர் இந்தியா விமான விபத்தில் புதைந்திருக்கும் சீக்ரெட்! கருப்பு பெட்டியில் கிடைத்த கோல்டன் சேசிஸ் முக்கிய பகுதி!!