பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததன் காரணமாக தங்க நகை கடன்களில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இதன் காரணமாக நிபந்தனைகளை தளர்த்தி ரிசர்வ் வங்கி விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் தளர்வுகளை வரவேற்று சு. வெங்கடேசன் எம்.பி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், தங்கக் கடன் பிரச்சனையில் நிபந்தனைகளை தளர்த்தி ரிசர்வு வங்கி விதிமுறைகளை வெளியிட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இப்பிரச்சனை சம்பந்தமாக ஒன்றிய நிதியமைச்சரிடம் நேரில் சந்தித்து தந்த கடிதத்தின் பல அம்சங்கள் ஈடேறி உள்ளன என்பது மகிழ்ச்சி. ரிசர்வ் வங்கி கவர்னருக்கு நான் எழுதிய கடிதத்திற்கும் எனது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக பதில் வந்தது. இப்பொழுது ரிசர்வு வங்கி முழுமையான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆர்பிஐ வெளியிட்ட நகைக்கடனுக்கான ரூல்ஸ்.. முழுமையாக ரத்து செய்க.. ஓ.பி.எஸ் வலியுறுத்தல்..!

இது எளிய மக்கள் நலனுக்கான குரலுக்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றி என்றும் முழுமையான விதிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை ஆராய்ந்து கூடுதல் தகவல்கள் மற்றும் கோரிக்கைகளை பகிர்ந்து கொள்வேன் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரூ.2 லட்சம் வரையிலான நகைக்கடனுக்கு விலக்கு.. ஆர்பிஐ-க்கு மத்திய நிதியமைச்சகம் பரிந்துரை..!