நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் சாலை விபத்தில் சிக்கி கவலைக்கிடமான நிலையில் இருந்த சிறுவனை, உயிரை பணயம் வைத்து சேலம் தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்கள் எஸ்கார்ட் வழங்க ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சிறுவன் உயிரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் கடந்த 30 ம் தேதி இரவு 7 மணிக்கு திருச்செங்கோடு அருகே புளியம்பட்டி பகுதியில் சாலை விபத்தில் சிக்கிய 8 வயது சிறுவன் தலையில் பலத்த காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் ஆபத்தான நிலையில் இருந்தால் அந்த சிறுவனுக்கு உடனடி மேல் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
சிறுவனை சேலம் அழைத்து செல்ல தயாராக இருந்த ஆம்புலன்ஸ் டிரைவர், இரவு 8 மணி பீக் ஹவர் என்பதால் திருச்செங்கோடு சேலம் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் என்பதாலும் இதனைத் தாண்டி வேகமாக சேலம் செல்லமுடியாது என கருதி ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு என பிரத்யேகமாக செயல்பட்டு வரும் வாட்ஸ் ஆப் குழுவில் சிறுவனின் உடல் நிலையை குறிப்பிட்டு தனது ஆம்புலன்ஸ்சிற்கு திருச்செங்கோட்டில் இருந்து சேலம் வரை எஸ்கார்ட் தேவை என உதவி கோரி தகவல் பதிவிட்டுள்ளார். உடனடியாக குழு அட்மின்கள் திருச்செங்கோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையும் படிங்க: ராமேஸ்வரம் கோயிலுக்குள் அட்ராசிட்டி... இடை தெரிய உடையணிந்து இன்ஸ்டா பிரபலம் நடனம்...!
இத்தகவலை படித்த மல்லசமுத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் திருச்செங்கோடு தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கார்த்தி(30) என்பவர் உடனடியாக பதிலளித்ததுடன் காளிபட்டியில் செயல்பட்டு வரும் அதே ஆஸ்பத்திரியின் ஆம்புலன்ஸ் டிரைவருக்கும் தகவல் கொடுத்தார். திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்தியில் இருந்த ஆம்புலன்ஸ் இரவு7.50 க்கு புறப்பட்டதை அறிந்து திருச்செங்கோடு அடுத்த செம்பாம்பாளையம் பகுதியில் சிறுவனை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸிற்கு இரு ஆம்புலன்ஸ் டிரைவர்களும் எஸ்கார்டு கொடுத்தனர். முன்னே ஒரு ஆம்புலன்ஸ் சரைன் ஒலிக்கவிட்டு வேகமாக செல்ல நடுவில் சிறுவனை ஏற்றிய ஆம்புலன்ஸ் செல்ல பின்னால் மற்றொரு ஆம்புலன்ஸ் சென்றது.
அதி வேகமாக மூன்று ஆம்புலன்ஸ்களும் பொது மக்களையும், வாகனங்களையும் ஒதுங்க செய்து சென்றன. வழக்கமாக திருச்செங்கோட்டில் இருந்து சேலம் செல்ல 1.20 மணி நேரம் ஆகும். ஆனால் சிறுவன் உயிரை காக்க ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 30 நிமிடத்திற்குள் சேலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிறுவனை கொண்டு சென்றனர். உரிய நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு சிறுவன் கொண்டு செல்லப்பட்டதால் சிகிச்சைக்குப் பின் தற்போது சிறுவன் உயிர் பிழைத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மல்லசமுத்திரம் ஆம்புலன்ஸ் டிரைவர் கார்த்திக்(30) கூறியதாவது:-
சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர்களை ஒருங்கிணைத்து எமர்ஜென்சி எஸ்கார்ட் வாட்ஸ் ஆப் குரூப் உள்ளது. கடந்த 30 ம் தேதி இரவு 7.50 மணிக்கு திருச்செங்கோடு ஜிஎச் ல் இருந்து சேலம் ஒரு கவலைக்கிடமான நிலையில் இருக்கும் குழந்தையை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ்க்கு எஸ்கார்ட் வேண்டும் என தகவல் வந்தது. அதனை உறுதி செய்து கொண்ட நான் காளிபட்டி பகுதியில் இருக்கும் ஆம்புலன்ஸ் டிரைவர் கவியரசனையும் சேர்த்துக் கொண்டு திருச்செங்கோட்டில் இருந்து சிறுவனை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ்க்கு எஸ்கார்ட் கொடுத்தோம்.
வழியில் கடுமையான டிராபிக் இருந்தது. ஆங்காங்கே கோயில் திருவிழா கூட்டம் இருந்தது. திருச்செங்கோடு முதல் அரியானூர் வரை உள்ள ரோட்டில் ஸ்பீடு பிரேக்கர்களும் அதிகம் இது குறித்து புதியதாக வந்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு தெரியாது ஆகவே நாங்கள் அந்த ஆம்புலன்ஸ்க்கு முன்னும் பின்னும் எஸ்கார்ட் கொடுத்து அரியானூர் வரை கொண்டு சென்றோம். வாட்ஸ் ஆப் குருப்பில் தகவலறிந்த சேலத்தை சேர்ந்த மற்றொரு ஆம்புலன்ஸ் டிரைவர் அரியானூரில் இருந்து தனியார் ஆஸ்பத்திரி வரை எஸ்கார்ட் கொடுத்தார். திருச்செங்கோட்டில் இருந்து 30 நிமிடத்தில் சிறுவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தோம். ஆம்புலன்ஸ்கள் வரும் போது அதில் ஒரு உயிர் போராடிக் கொண்டிக்கிறதை உணர்ந்து பொதுமக்கள், வாகன டிரைவர்கள் வழிவிட வேண்டும் எனத் பொது மக்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
தங்களது உயிரை பணயம் வைத்து திருச்செங்கோட்டில் இருந்து அரை மணி நேரத்தில் சிறுவனை சேலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று உயிரைக் காத்த ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: “பொதுநல மனு என்ற பெயரில்...” - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு....!!