தமிழகத்தில் புதிதாக 11 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் கல்லூரிகளை முதல்வர் திறந்து வைத்துள்ளார்.

கடலூர் மாவட்டம் - பண்ருட்டி, நீலகிரி மாவட்டம் - குன்னூர், திண்டுக்கல் மாவட்டம் - நத்தம், சென்னை மாவட்டம் - ஆலந்தூர், விழுப்புரம் மாவட்டம்- விக்கிரவாண்டி, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், திருவாரூர் மாவட்டம்- முத்துப்பேட்டை, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உள்ளிட்ட இடங்களில் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பச்சா பாலிடிக்ஸ்.. திமுகவை விமர்சிக்கும் விஜய்யை ஒரே வார்த்தையில் டேமேஜ் ஆக்கிய துரைமுருகன்!!

மேலும், தூத்துக்குடி மாவட்டம் - ஒட்டப்பிடாரம், தஞ்சாவூர் மாவட்டம் - திருவிடைமருதூர், பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் ஆகிய இடங்களில் புதிதாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கட்டப்பட்டன. அவற்றை முதலமைச்ச ஸ்டாலின் என்று தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் தலைமையில் மீண்டும் திமுக ஆட்சி.. உதயநிதி முன்னிலையில் உறுதி எடுத்த இளைஞரணி நிர்வாகிகள்.!