இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கும்பகோணம் அருகே சுவாமிமலை கோயிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்வது போல் திருச்செந்தூர், திருவண்ணாமலை, பழனி ஆகிய திருக்கோவில்களில் பக்தர்கள் வழிபட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.ஆரம்பகட்ட பணிகள் துவங்கிவிட்டது என்றும் விரைவில் தமிழக முதல்வர் இச் செயல்பாட்டினை துவக்கி வைப்பார் எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை மூவாயிரம் கோவில்கள் திருப்பணி செய்யப்பட்டுகுடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டுக்குள் மேலும் ஆயிரம் கோயில்களில் திருப்பணி செய்யப்பட்டுகும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் சேகர் பாபு தெரிவித்தார்.

ஒரு கால பூஜை நடைபெறும் கோவில்களில் வைப்பு நிதியை அதிகப்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் வட்டியை கொண்டு பூஜை செய்யும் அர்ச்சகர் பயன்பெறும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும், தமிழகத்தில் 29 ஆயிரம் திருக்கோவில்களுக்கு மின்விளக்கு கட்டணங்களை அரசு கட்டுகிறது என்றும்அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இதையும் படிங்க: மக்கள் தொகை, சாதி வாரி கணக்கெடுப்பு.. மத்திய அரசின் முடிவுக்கு ஓ.பி.எஸ் வரவேற்பு..!
மத்திய தொல்லியல் துறையினர்,அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை சீரமைக்க அனுமதி தர மறுத்து வருகின்றனர்.பல்வேறு இடங்களில் காலதாமதம் படுத்துகிறது.
இதனால் திருச்சி அருகே திருவரம்பூரில் உள்ள மத்திய தொல்லியல் துறைக்கு சொந்தமான கோவிலில் அடிப்படை வசதிகள் செய்து தர முடியாமல் உள்ளது என்றும் அமைச்சர் சேகர்பாபு கவலை தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஹமாஸ் அமைப்பினரால் கொல்லப்பட்ட பிணைக் கைதிகள்.. 2 பேரின் உடல்கள் கண்டெடுப்பு..!