முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவருமான ஓ. பன்னீர்செல்வம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். இன்று காலை, அவர் அண்ணா அறிவாலயத்துக்கு சென்றபோது, முதலமைச்சர் ஸ்டாலின் அவரை ஆரத்தழுவி வரவேற்றார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் உடன் இருந்தனர்.
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ள முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது என சசிகலா தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலிருந்து அகற்றப்படவேண்டிய ஒரு தீய சக்தியாக திமுக விளங்கும் நிலையில் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு திமுகவில் தங்களை இணைத்துக்கொள்வது ஒரு தவறான முடிவாகத்தான் அமைந்துள்ளது என்று கூறினார். ஆனால் இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான் என்றும் அவர் வேறு யாருமில்லை எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உங்க வாயால அந்த வார்த்தையா? கொச்சைப்படுத்திடீங்க ஓபிஎஸ்..! தமிழிசை ஆதங்கம்..!!
தான் மட்டும்தான் அதிமுக என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு தனக்கு தானே தலைவராக அறிவித்துக் கொண்டவர்கள், தன்னை சுற்றியுள்ளவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள், திமுகவினரின் முழு கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள அனைவரையும் வெளியேற்றி விட்டு கொள்கைகளுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டுவரும் துரோகிகளின் அழிவுகாலம் நெருங்கிவிட்டது என்றும் கூறினார். இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் தனது தலைமையில் MGR ரத்தத்தின் ரத்தங்களும், ஜெயலலிதாவின் வழிவந்த சிங்கங்களும் எதிரிகளையும் துரோகிகளையும் வீழ்த்துவது உறுதி எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வாங்க... வாங்க ஓபிஎஸ்.! அன்பானவர், பண்பானவர்..! புகழ்ந்து தள்ளிய முதலமைச்சர்..!!