பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் நில கண்காணிப்பாளர் முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளைகள் தாக்கல் செய்த மனு
சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான சொத்தை பதிவு துறையின் புதிய விதிகளை பின்பற்றாமல் முறைகேடாக சொத்துக்களை தனிநபரான சேதுபதி மற்றும் வெள்ளத்துரை ஆகியோருக்கு பத்திரம் பதிவு செய்து கொடுத்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை இரண்டு நீதிபதிகள் அமர்வு பத்திரப்பதிவு செல்லாது என தீர்ப்பு வழங்கி உள்ளது.
இந்த விவகாரத்தில் சார் பதிவாளர் பத்திர பதிவு செய்யக்கூடாது என கோவில் தரப்பில் வழங்கப்பட்ட மனுவை பரிசீலிக்காமல் பதிவுத்துறை விதி 22A இதற்கு எதிராக பத்திரப்பதிவு நடவடிக்கை செய்து உள்ளார். தற்போது இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பழனி நில மோசடி விவகாரத்தில் மெகா ட்விஸ்ட்... சிபிசிஐடி விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் காரியம்...!
சார் பதிவாளர் தூய கரங்களுடன் நீதிமன்றத்தை அணுகவில்லை எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என இடை ஈட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
நடந்தது என்ன?
பழனி முருகன் கோயிலின் அடிவாரத்தில் தண்டாயுதபாணி மடத்திற்குச் சொந்தமான அறக்கட்டளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளைக்கு சொந்தமான 1.40 ஏக்கர் நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.100 கோடி என கூறப்படுகிறது.
இந்த நிலம் வெறும் ரூ.2 கோடிக்கு தனிநபர்களுக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக எழுந்த புகார் கடந்த ஒரு வாரமாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, முறைகேடாக பத்திரப்பதிவு நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்க மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை அரசு அமைத்துள்ளது. துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மற்றொரு புறம், காவல்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அதன் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், கூட்டுச் சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல், போலி ஆவணங்களை உண்மையானவை என நம்ப வைத்து பயன்படுத்துதல், சொத்து அபகரிப்பு உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இணை சார்பதிவாளர், நிலத்தை வாங்கிய இருவர் மற்றும் நிலத்தை விற்ற ஒருவர் என மொத்தம் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.பொறுப்பு சார் பதிவாளராக சென்ற ஜஸ்டின் மணிகண்டன் பழனி கோவில் நில விவகாரத்தில், உரிய நீதிமன்ற உத்தரவுகளை மீறி சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்த புகாரில் இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: பழனி ரூ.100 கோடி கோயில் நில மோசடி... களமிறங்கிய சிபிசிஐடி.. அடுத்தடுத்து சிக்கப் போவது யார்?