தற்சார்பு பாரதம் உருவாக சுதேசி பொருட்களுக்கு முன்னுரிமை அளிப்போம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சியில் பேரிடர் மேலாண்மை, ஜம்மு காஷ்மீரின் முன்னேற்றம், விளையாட்டு, மத்திய பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள், சூரிய சக்தி, இத்தாலியில் திறக்கப்பட்ட வால்மீகி சிலை எனப் பல்வேறு தலைப்புகள் குறித்து நாட்டுமக்களுடன் கலந்துரையாடி உள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
உரையின் இறுதியில் பிரதமர் மோடி குறிப்பிட்டது போல நாம் அனைவரும் நம் தாய்நாட்டுத் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய நேரமிது என தெரிவித்தார். உள்ளூர் பொருட்களை அதிகளவில் வாங்கும் போது உள்நாட்டு வர்த்தகம் வலுவடையும் என்று கூறினார். அதிலும் உலக அளவில் பொருளாதார நிலைகள் மாறிவரும் காலக்கட்டத்தில் உள்நாட்டுப் பொருட்களுக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவமே நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமிடும் எனவும் கூறினார்.

எனவே, பிரதமர் மோடி குறிப்பிட்டது போல, எதிர்வரும் ஓணம், நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை ஆகிய பண்டிகை காலங்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையும் ஆடைகளையும் வாங்குவோம் என தெரிவித்தார். மேலும், உள்ளூர் வியாபாரிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் நம்மால் இயன்ற ஆதரவை நல்குவோம் என்றும் தற்சார்பு இந்தியாவை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்குவோம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எங்க இருந்து வருது இவ்ளோ தைரியம்! இது மக்களுக்கான ஆட்சியா? மக்களை வதைக்கும் ஆட்சியா? விளாசிய நயினார்
இதையும் படிங்க: சொன்னீங்களே செஞ்சீங்களா? திமுகவை பந்தாடிய நயினார் நாகேந்திரன்...