பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக நீதி பேரவைத் தலைவர் பொறுப்பில் இருந்து வழக்கறிஞர் பாலுவை நீக்கி, அவருக்கு பதிலாக வழக்கறிஞர் வி.எஸ்.கோபுவை நியமித்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், இந்த நீக்கத்துக்கு எதிராக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னையில் நடந்த வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவையின் சிறப்பு செயற்குழுக் கூட்டத்தில், பாலு தனது பதவியில் தொடர்வார் என்று தீர்மானிக்கப்பட்டது.

கட்சி விதிகளின்படி, பேரவையின் தலைவரை அறங்காவலர் குழு மட்டுமே நீக்க முடியும் எனவும், பாலு தனது பதவிக்காலம் முடியும் வரை தலைவராகத் தொடருவார் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த முரண்பாடு, ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உள்கட்சி பனிப்போரை வெளிப்படுத்துவதாக இருந்தது. இந்த நிலையில் ராமதாஸ் மீது அன்புமணி பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: சல்லி, சல்லியாய் நொறுங்கப்போகும் பாமக... அன்புமணிக்கு கல்தா கொடுக்கப்போகும் ராமதாஸ்...!

பாமக சமூக நீதிப் பேரவை தலைவர் நியமனத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும் வழக்கறிஞராக தகுதியே இல்லாதவர் சமூக நீதிப் பேரவை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

பாலுவை நீக்கிவிட்டு கோபுவை சமூக நீதிப் பேரவை தலைவராக நியமித்திருப்பது குறித்து அதிருப்தி தெரிவித்த அன்புமணி, ராமதாசால் நியமிக்கப்பட்ட கோபுவிடம் தான் வழக்கறிஞருக்கான எந்த தகுதியையும் பார்த்ததில்லை இன்று குற்றம் சாட்டினார்.எது நடந்தாலும் நடக்கட்டும், பார்த்துக் கொள்ளலாம் என தாங்கள் செயல்பட்டு வருவதாகவும் அன்புமணி தெரிவித்தார்.
இதையும் படிங்க: 6 மாவட்ட செயலாளர்கள் கூண்டோடு மாற்றம் - அதிரடி ஆக்ஷனில் இறங்கிய ராமதாஸ்...!