பாமகவில் அப்பா, மகனுக்குள் ஏற்பட்ட மோதல் முற்றி தற்போது கட்சியே இரண்டு துண்டாக உடையும் நிலைக்குச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குடும்ப உறுப்பினர்கள், பாமக முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகளும், சமரச முயற்சிகளும் படுதோல்வி அடைந்ததாகக்கூறப்படுகிறது. தங்களது முடிவில் ராமதாஸும், அன்புமணியும் பிடிவாதமாக இருப்பதாக தெரிகிறது. எனவே இணைப்பு என்பது இனி சந்தேகம் என்ற அளவிற்கு தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாளை செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவராக கரூரை சேர்ந்த பாஸ்கரன் என்பவரை நியமிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று அன்புமணியுடன் சேர்த்து, பல முக்கிய முன்னணி நிர்வாகிகளை கட்சியை விட்டு அதிகாரப்பூர்வமாக நீக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவுக்கு அவர் கடும் கோபத்தில் தானே கட்சியை முன்னின்றி நடத்துவது என்ற வகையில் களமிறங்க போகிறார் என்றும், தானே தலைவர் என்று அறிவித்து மீண்டும் கட்சியை நடத்துவதற்கான முடிவுகளை எடுத்திருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: 6 மாவட்ட செயலாளர்கள் கூண்டோடு மாற்றம் - அதிரடி ஆக்ஷனில் இறங்கிய ராமதாஸ்...!

ஒரு பக்கம் ராமதாஸ் இப்படி முடிவெடுத்திருக்க, மறு பக்கத்திலே அன்புமணி ராமதாஸ்டாக்டர் ராமதாசை வழிகாட்டியாக மனதில் நிறுத்திக்கொண்டு தான் தொடர்ந்து கட்சி பணியில் ஈடுபட இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அதுவும் ஜூன் 15ஆம் தேதியிலிருந்து 10 வட மாவட்டங்களில் உள்ள முக்கியமான மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி இந்த மாவட்டங்களிலே பொதுக்குழு கூட்டங்களை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார். அதுவும் குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி வலுவாக உள்ள இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினாக பங்கேற்க இருக்கிறார். 
எனவே சம்பந்தப்பட்ட வருவாய் மாவட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநில மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பாட்டாளி மக்கள் கட்சியின் பல்வேறு அணிகள், வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகள் ஆகியவற்றில் அனைத்து நிலை நிர்வாகிகளும் சிறப்பு அழைப்பாளர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் கட்சி இரண்டாக உடைகிறதா என்ற அச்சம் பாமவினர் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: கட்சிப் பணியில் தீவிரம் காட்டும் அன்புமணி.. வரும் 15ம் தேதி முதல் பொதுக்குழு கூட்டம்..!