பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பு, கட்சி வளர்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைந்த வருவாய் மாவட்ட அளவில் பொதுக்குழு கூட்டங்களை நடத்துவதற்கு கட்சியின் தலைமை முடிவு செய்து இருப்பதாகவும் முதற்கட்டமாக 10 வருவாய் மாவட்டங்களில் பொதுக்குழு கூட்டங்கள் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூன் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டத்துக்கான பொதுக்குழு கூட்டமும், அன்றைய தினம் மதியம் மூன்று மணி அளவில் செங்கல்பட்டு மாவட்டத்துக்கான பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. 16 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் காஞ்சிபுரம் மாவட்ட பொதுக்கூட்டமும் அன்று மதியம் மூன்று மணியளவில் ராணிப்பேட்டை மாவட்டம் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: பாமகவில் இருந்து வழக்கறிஞர் பாலு நீக்கம்... ராமதாஸ் செயலால் தொண்டர்கள் ஷாக்...!

தொடர்ந்து 17 ஆம் தேதி காலை வேலூர் மற்றும் மதியம் திருப்பத்தூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாகவும் 18ஆம் தேதி திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி, 19ஆம் தேதி சேலம், தர்மபுரி மாவட்டங்களுக்கான பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

மேற்கண்ட அனைத்து மாவட்டங்களின் பொதுக்குழு கூட்டங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்றும் சம்பந்தப்பட்ட வருவாய் மாவட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர், மாவட்ட செயலாளர், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பா.ம.க.வின் பல்வேறு அணிகள், வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் இக்கூட்டங்களில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அசிங்கமா இல்லையா.. கட்ட பஞ்சாயத்து ஒரு பிழைப்பா? வறுத்தெடுத்த அன்புமணி..!