பாமகவில் ராமதாஸ் அவரது மகன் அன்புமணி இடையேயான மோதல் என்பது முற்று பெறவில்லை. தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நீருபூத்த நெருப்பாக இருவருக்கு இடையேயான மோதல் தொடர்கிறது என்பதைத்தான் இன்று காலை முதல் நடைபெறக்கூடிய சம்பவங்கள் உணர்த்துகின்றன தொடர்ச்சியாக கட்சியில் இருக்கக்கூடிய பல்வேறு நிர்வாகிகளை நீக்கம் செய்து பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ் உத்தரவிட்டுருக்கிறார்.

ஏற்கனவே கிட்டத்தட்ட ஒரு 30க்கும் அதிகமான மாவட்ட நிர்வாகிகளை ராமதாஸ் நீக்கி இருந்தார். இந்த நிலையில் இன்று காலை முதல் தொடர்ச்சியாக பல நிர்வாகிகள் பல்வேறு பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் பாமகவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிர்வாகியாக பார்க்கப்படக்கூடிய வழக்கறிஞர் பாலு முக்கிய பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: அசிங்கமா இல்லையா.. கட்ட பஞ்சாயத்து ஒரு பிழைப்பா? வறுத்தெடுத்த அன்புமணி..!

பாமகவில் வழக்கறிஞர் சமூகநீதி பேரவை என்ற ஒரு அமைப்பு பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பினுடைய தலைவராக வழக்கறிஞர் பாலு பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து வழக்கறிஞர் பாலு நீக்கம் செய்யப்பட்டு வழக்கறிஞர் கோபு என்பவர் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

இது கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ராமதாஸ் இடையேயான மோதலை தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் சென்னை அருகே மூன்று
நாட்கள் தொடர்ச்சியாக மாநில நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தினார். மேலும் அன்புமணியோடு எப்போதும் தொடர்ந்து நெருக்கமாக இருப்பதோடு ராமதாசுடனும் வழக்கறிஞர் பாலு நெருக்கமான ஒரு உறவை தொடர்ந்து கடைபிடித்து வந்த நிலையில், தற்போது அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது கட்சியினுடைய நிர்வாகிகள் மத்தியில் மிகுந்த ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: 35 புதிய கல்லூரிகள்; பேராசிரியரை நியமிக்காத திமுக அரசு... கழுவி ஊற்றிய அன்புமணி!!