திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் தமிழக வெற்றிக் கழகம் புகார் அளித்துள்ளது.
காவிரி பிரச்சினை, விவசாயிகளின் நீர் ஆதாரப் பிரச்சினை மற்றும் அதனைத் தீர்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும், கர்நாடக அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்தும், தஞ்சாவூரில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம், திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இதையும் படிங்க: #BREAKING உதயநிதிக்கு பேரதிர்ச்சி... காலையிலேயே அறிவாலயத்தில் இடியை இறக்கிய தவெக...!
ஆளுங்கட்சியை விமர்சித்ததுடன், முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஆதாரமற்ற மற்றும் அவதூறான கருத்துகளை உதயநிதி ஸ்டாலின் பொதுமேடையில் பேசியதாக தமிழக வெற்றிக் கழகத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த், அமைச்சர் ஆதர்வ் அர்ஜுனா , ராஜ்மோகன், கீர்த்தனா உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பல்வேறு முக்கிய நிர்வாகிகள் தங்களது கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினின் பேச்சைக் கண்டித்து, இன்று காலை மகளிர் நிர்வாகிகள் தலைமையில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்தப் போராட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி அனைத்து காவல்நிலையங்களிலும் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளிக்கவும் தவெக தலைமை அறிவுறுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் தவெக மகளிர் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தவெக மகளிர் அணி அமைப்பாளர் அளித்துள்ள புகாரில், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக தேசிய மகளிர் ஆணையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முறையான புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகார் மனுவில், தமிழக முதலமைச்சருடன் தொடர்பில்லாத நபர்களை இணைத்துப் பேசியது குறித்தும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் அவதூறுகளை எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருந்தபடியே பொதுமேடையில் முன்வைத்தது குறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியின் மாண்பை மீறும் வகையில் முதலமைச்சர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.3 லட்சம் கோடி ஊழல் ... செந்தில் பாலாஜியால் சிக்கும் உதயநிதி... சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!