சிறுவன் கடத்தல் வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கின் விசாரணை இன்று நடைபெறும் நிலையில் பிற்பகல் 2.30 மணி அளவில் ஜெகன் மூர்த்தி ஆஜராக வேண்டும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். மேலும் கடத்தலுக்கு துணையாக இருந்ததாக ஏடிஜிபி ஜெயராமனும் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் சுமார் 3.30 மணி அளவில் பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ நீதிமன்றத்தில் ஆஜரானார்.

மனு மீதான விசாரணையின் போது, கூலிப்படையினரை வைத்து கடத்தலில் ஈடுபட்டதாக காவல்துறை கூறுவது தவறு என்று ஜெகன் மூர்த்தி தரப்பில் வாதிடப்பட்டது. கூலிப்படையினர் யாரும் கடத்தலில் ஈடுபடவில்லை என்று கூறப்பட்டது. அப்போது, சிறுவன் கடத்தலில் ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு உள்ளது கடத்தல் சம்பந்தமாக வழக்கறிஞர் சரத்குமார் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். முன்னாள் காவல் அதிகாரி மகேஸ்வரியும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிறுவனை கடத்தி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றதற்கான சிசிடிவி காட்சிகள் உள்ளது. காவல்துறையில் உள்ள பிரச்சனை காரணமாக ஒரு அதிகாரியை இழுக்க முயற்சி செய்ததாக அரசு தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. சரத், டேவிட், வனராஜ், உள்ளிட்டோர் தனுஷ் வீட்டுக்கு சென்று சிறுவனை கடத்தி உள்ளனர்., காதல் விவகாரத்தில் இளைஞரின் தம்பியை அவரது வீட்டிற்கே சென்று கடத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளது என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.
இதையும் படிங்க: ஆள்கடத்தல் வழக்கு! முன்ஜாமின் கேட்ட ஜெகன் மூர்த்தி MLA நீதிமன்றத்தில் ஆஜர்.. பதற்றம்! பரபரப்பு!

அப்போது எந்த தொகுதி எம்எல்ஏ நீங்கள் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றீர்கள் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக ஜெகன் மூர்த்தி பதில் கூற, தங்களின் குரலாக சட்டமன்றத்தில் பேசத்தான் மக்கள் வாக்களித்தனர்., அதை மறந்து கட்டப்பஞ்சாயத்து செய்வதால் என்று நீதிபதி வேல்முருகன் கேள்வி எழுப்பினார். ஒரு எம்எல்ஏ மக்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் கட்டப்பஞ்சாயத்து செய்ய யார் அதிகாரம் கொடுத்தது எனவும் கேள்வி எழுப்பப்பட்டது. விசாரணைக்கு எம்எல்ஏ ஒத்துழைக்காவிட்டால், மக்கள் எப்படி ஒத்துழைப்பார்கள் என்றும் பதவியை தவறாக பயன்படுத்தினால் வேடிக்கை பார்க்க முடியாது., எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். சிறுவன் கடத்தல் விவகாரம் உங்கள் கட்சிக்கு சம்பந்தப்பட்டதா? உங்களுக்கு தொடர்பு இல்லாவிட்டாலும் உங்கள் பெயரை பயன்படுத்தினாலும் குற்றம்தான்., நீதிமன்றம் நினைத்திருந்தால் பத்து நிமிடத்தில் உங்களை கைது செய்து சிறையில் அடைத்திருக்க முடியும்., என்ன நீதிபதி கூறினார்.

கைது செய்து சிறையில் அடைக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், ஏடிஜிபியிடம் வாக்குமூலங்களை பெற்று தாக்கல் செய்யவும் கூறிய நீதிபதி, ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ தொடர்பான இந்த வழக்கு விசாரணை வரும் ஜூன் 26ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!