மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக அதிமுக எழுதிக் கொடுத்தது உண்மைதான் என்றும் எடப்பாடி பழனிச்சாமியும் அமைச்சர்களும் இதனை ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

ஏற்கனவே அன்புமணிக்கும் ஜி. கே வாசனுக்கும் அதிமுக தரப்பில் ராஜ்ய சபா சீட் தரப்பட்டிருக்கிறது. இந்த முறை தேமுதிகவிற்கு என்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது என்றும் ஏன் இவற்றை இத்தனை நாட்களாக சொல்லவில்லை என்றால் அறிவிக்கும் இடத்தில் அதிமுக இருப்பதாகவும் கூறினார். அரசியல் என்பது தேர்தலை நோக்கிய செல்வதாகவும், தேமுதிகவும் அரசியலை நோக்கி மட்டுமே செல்வதாகவும், ஜனவரி மாதம் தான் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடுவோம் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: ரெண்டே சீட்டு! பங்கு போடும் நிர்வாகிகள்.. ராஜ்யசபா வேட்பாளர்களை அறிவிக்கிறது அதிமுக!

மேலும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி கூறினார்.
இதையும் படிங்க: பாமகவால் தேமுதிகவிற்கு அடித்த ஜாக்பாட்... திடீர் மனமாற்றத்தில் எடப்பாடி பழனிசாமி..!