தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான ஆறு உறுப்பினர்களின் பதவி காலம் முடிவடைய உள்ளது. மாநிலங்களவையில் உள்ள பாமகவின் அன்புமணி ராமதாஸ், திமுகவின் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், அதிமுகவின் என்.சந்திரசேகரன், மதிமுகவின் வைகோ ஆகியோரின் பதவிக் காலம் ஜூன் 24ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜூன் ஒன்பதாம் தேதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நிலையில், ஜூன் 12-ம் தேதி வேப்பமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இரண்டு ராஜ்ய சபா சீட்டுகளுக்கு 20 பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுத்த வருவதாக கூறப்பட்டது. அதிமுக ராஜ்யசபா சீட் அளித்தால் தேமுதிக கூட்டணி வைக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், எல் கே சுதீஷ், எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ராஜ்யசபா சீட் குறித்து கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: முதல்வர் வழிகாட்டுதலில் உங்கள் குரல் ஒலிக்கட்டும்! ராஜ்யசபா திமுக வேட்பாளர்களை வாழ்த்திய உதயநிதி...

மேலும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வழக்கறிஞர் பிரிவு இன்ப துரை ஆகியோர் சீட் கேட்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நட்சத்திர பேச்சாளர் விந்தியா, முன்னாள் அமைச்சர் செம்மல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை நிர்வாகிகள் சிலரும் ராஜ்ய சபா சீட்டுக்காக காய் நகர்த்துவதாகவும் கூறப்படும் நிலையில், இன்று மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பாமகவால் தேமுதிகவிற்கு அடித்த ஜாக்பாட்... திடீர் மனமாற்றத்தில் எடப்பாடி பழனிசாமி..!