மக்கள் விஜய்க்கு வாக்களிப்பார்கள் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்கக் கூடாது என திமுகவில் இணைந்த விஜயின் முன்னாள் மேலாளர் P.T. செல்வகுமார் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகின் ஒரு முக்கியமான முகமாக, பல்வேறு பாதைகளைத் தாண்டி வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர் பி.டி. செல்வகுமார். 1970 ஜனவரி 1 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த இவர், தனது தொழில் வாழ்க்கையை பத்திரிகைத்துறையில் தொடங்கி, பிஆர்.ஓ., தயாரிப்பாளர், இயக்குனர் எனப் பல பாதைகளைப் பயணித்து, சமூக ஆர்வலராகவும், அரசியல் விளையாட்டாளராகவும் உருவெடுத்துள்ளார்.
விஜயின் 27 ஆண்டுகால நெருக்கமான தோழன், அவரது படங்களின் பி.ஆர்.ஓ. ஆகவும் மேலாளராகவும் இருந்த செல்வகுமார், 'புலி' படத்தின் தயாரிப்பாளராக இருந்தாலும், அந்தப் படத்தின் தோல்வி அவரது வாழ்க்கையில் ஒரு தீவிரமான திருப்பத்தை ஏற்படுத்தியது. செல்வகுமாரின் கடுமையான மேலாண்மை, தொழில்நுட்ப அறிவு, மற்றும் தொடர்பு வலையமைப்பு, சினிமா உலகில் அவருக்கு மரியாதையைப் பெற்றுத் தந்தது. விஜயின் படங்கள் வெளியாகும் போது, அவரது பி.ஆர். உத்திகள் திரைப்படங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தன. இந்தக் காலகட்டத்தில், செல்வகுமார் வெறும் மேலாளராக மட்டுமல்ல, விஜயின் நெருக்கமான நண்பராகவும் இருந்தார்.

இன்று, செல்வாக்குமார் முதல்வர் மு.க. ஸ்டாலினின் முன்னிலையில் திமுகவில் இணைந்து, அரசியல் அரங்கில் புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். திமுகவில் இணைந்த செல்வகுமார் தன்னைப் போன்றவர்கள் தமிழக வெற்றி கழகத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: ட்விஸ்ட்... விஜயின் முன்னாள் மேலாளர் பி.டி. செல்வக்குமார் திமுகவில் ஐக்கியம்...!
விஜய் ஒரு நடிகராக சிறப்பாக பணியாற்றியதால் அவருடன் பயணித்தேன் என்றும் தவெகவில் விஜய்யின் தந்தையவே ஏற்றுக்கொள்ள முடியவில்லை, புதிதாக வந்தவர்களால் என்னை போன்றவர்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை எனவும் குற்றம் சாட்டினார். விஜய் மக்களையும், ரசிகர்களையும் சரியாக வழி நடத்துவாரா என்பது எனக்கு தெரியவில்லை என்று கூறினார். விஜயுடன் ஆரம்ப காலத்தில் இருந்து தியாகம் செய்தவர்கள் யாரும் இப்போது அவருடன் இல்லை என்று கூறிய செல்வகுமார், விஜயை பார்க்க கூட்டம் வரும், ஆனால் அவருக்கு வாக்களிப்பார்கள் என்று கனவில் கூட நினைக்க கூடாது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2026ல் விஜயை முதல்வர் ஆக்கணும்..! தவெக ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்...!