தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பயங்கரவாதம் ஐரோப்பிய நாடுகளையும் வேட்டையாடும்! ஓசாமா பின்லேடன் நியாபகம் இருக்கா? ஜெய்சங்கர் வார்னிங்

வரும் 14 ,15ஆம் தேதி நீலகிரிக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும்,17 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
இதையும் படிங்க: சேலத்துக்கு அடிச்ச ஜாக்பாட்! ஆறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்…