• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 31, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பொள்ளாட்சி வழக்கில் நியாயம் கிடைக்க ஆறரை ஆண்டு ஆனது... எடப்பாடியை வறுத்தெடுத்த கனிமொழி!!

    பொள்ளாச்சி பாலியல் வழக்கை எடப்பாடி பழனிசாமி நடத்திய லட்சணத்தை நாடறியும் என திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.
    Author By Raja Wed, 28 May 2025 17:25:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kanimozhi has criticized Edappadi Palaniswami for his handling of the Pollachi sexual assault case

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுக்குறித்து கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 12 குற்றச்சாட்டுகளில், 11 குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி உள்ளதாக சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. ஜூன் 2 ஆம் தேதி தண்டனை விவரங்களை அளிப்பதாக நீதிபதி அறிவித்திருக்கிறார். கடந்த டிசம்பரில் நடந்த நிகழ்வில் மிகத் துரிதமாகக் குற்றவாளியைக் கண்டுபிடித்து, குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, வழக்கு விசாரணையை முடித்து, குற்றவாளிக்குத் தண்டனையையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது தமிழகக் காவல் துறை. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி அதே பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். உடனே குற்றவாளி ஞானசேகரனை போலீஸ் கைது செய்தது. 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழு, வழக்கை விசாரித்தது. பாலியல் வழக்கு மட்டுமல்லாது, ஏற்கெனவே ஞானசேகரன் மீதான திருட்டு, ஆள் கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட பல வழக்குகளையும் காவல் துறை விசாரித்தது. மார்ச் மாதம் முதல் விசாரணை தொடங்கியது.

    ADMK

    தினந்தோறும் என்ற அடிப்படையில் ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் சாட்சிகள் விசாரணை நடைபெற்றது. பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. சம்பவம் நடந்த நாளிலிருந்து சரியாக 157 ஆவது நாளில் குற்றவாளியின் தண்டனையை உறுதி செய்திருக்கிறது தமிழகக் காவல்துறை. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில், சிபிஐ விசாரணையை கேட்ட போது, 'சிபிஐ விசாரணை தேவையில்லை' என டிஜிபி அறிக்கை தாக்கல் செய்தார். சிபிஐ கூட இவ்வளவு துரிதமாக விசாரித்திருக்க முடியுமா? எனக் கேட்கும் அளவுக்கு இந்த வழக்கைத் தமிழகக் காவல் துறை மிகச் சிறப்பாக நடத்தி குற்றவாளியின் குற்றத்தை நிரூபித்திருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாகக் கடந்த ஜனவரி 8 ஆம் தேதி சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, "இந்த வழக்கின் குற்றவாளி மீது தயவுதாட்சணியம் இல்லாமல் காவல்துறை நடவடிக்கை எடுக்கும். இந்த வழக்கில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிக்கு உச்சபட்சத் தண்டனை கிடைக்கும்" என்று சொன்னார். அதனைச் செய்து காட்டியிருக்கிறார்.  

    இதையும் படிங்க: கூச்சம் இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறீர்களே! முதலமைச்சரை வசைப்பாடிய இபிஎஸ்...

    ADMK

    அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் தீர்ப்பு வெளியாவதற்கு 15 நாட்களுக்கு முன்புதான், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்குச் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த வழக்கோடு அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கையும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு நாட்டையே உலுக்கியது. பொள்ளாச்சி பாலியல் குற்றச் சம்பவம் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை நடைபெற்றாலும், 2019-ம் ஆண்டுதான் வெளிச்சத்துக்கு வந்தது. அன்றைக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் பொள்ளாச்சி பாலியல் வழக்கை வெளிக் கொணராமல் போயிருந்தால் அன்றைய எடப்பாடி பழனிசாமி அரசு விவகாரத்தை மூடி மறைத்திருக்கும். அதிமுகவினர் சம்பந்தப்பட்டிருந்ததால் வழக்கைப் பதியாமல் இழுத்தடித்ததோடு பாதிக்கப்பட்ட மாணவியின் அண்ணனையே தாக்க முயன்றார்கள்.பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்த வந்த பாதையைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். 2019 பிப்ரவரி 24 - கல்லூரி மாணவி புகார் அளித்தார்.

    ADMK

    வழக்குப்பதிவு செய்து 3 பேரைக் கைது செய்தனர். 2019 மார்ச் 4 - முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு கைது. 2019 மார்ச் 12 - சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம். 2019 ஏப்ரல் 27 - வழக்கு சிபிஐ-க்கு மாற்றம். 2019 மே 21 - முதல் குற்றப்பத்திரிகை தாக்கல். 2021 ஜனவரி 6 - இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல். 2023 பிப்ரவரி 24 - சாட்சி விசாரணை தொடங்கியது. 2024 பிப்ரவரி 23 - குற்றவாளிகள், சாட்சியங்களிடம் தினமும் விசாரணை நடைபெற்றது. 2025 மே 13 – தீர்ப்பு. 2019 பிப்ரவரி தொடங்கி 2025 மே மாதம் வரையிலான ஆறரை ஆண்டுகள் பொள்ளாச்சி பாலியல் வழக்கு நடைபெற்றது. இத்தனைக்கும் அந்த வழக்கை விசாரித்தது சிபிஐ. ஆனால், அண்ணா பல்கலைக்கழக வழக்கை விசாரித்தது தமிழகக் காவல் துறை. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நியாயம் கிடைக்க ஆறரை ஆண்டுகள் ஆனது. அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் 157 நாளில் தீர்ப்பைப் பெற்றுக் கொடுத்திருக்கிறோம். 2019 முதல் 2021 மே வரையில் எடப்பாடி பழனிசாமிதான் ஆட்சியில் இருந்தார். பொள்ளாச்சி பாலியல் வழக்கை அவர் நடத்திய லட்சணத்தை இந்த நாடறியும் என்று விமர்சித்துள்ளார்.

    இதையும் படிங்க: மலிவு அரசியல் தவிடுபொடியானது! அண்ணா பல்கலை. வழக்கின் தீர்ப்பை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்...

    மேலும் படிங்க
    இரண்டாம் தகுதி சுற்றுக்கு முன்னேறியது மும்பை அணி... 20 ரன் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி!!

    இரண்டாம் தகுதி சுற்றுக்கு முன்னேறியது மும்பை அணி... 20 ரன் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி!!

    கிரிக்கெட்
    இந்தோனேசியா கல் குவாரியில் பாறை சரிவு... 13 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு!!

    இந்தோனேசியா கல் குவாரியில் பாறை சரிவு... 13 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு!!

    உலகம்
    தங்கக் கடன்கள் வாங்க போறீங்களா.? நல்ல செய்தி சொன்ன ஆர்பிஐ.!!

    தங்கக் கடன்கள் வாங்க போறீங்களா.? நல்ல செய்தி சொன்ன ஆர்பிஐ.!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    வேற லெவலில் மாஸ் காட்டும் டிவிஎஸ் Jupiter 125 DT SXC ஸ்கூட்டர் அம்சங்கள்.. விலை எவ்வளவு.?

    வேற லெவலில் மாஸ் காட்டும் டிவிஎஸ் Jupiter 125 DT SXC ஸ்கூட்டர் அம்சங்கள்.. விலை எவ்வளவு.?

    ஆட்டோமொபைல்ஸ்
    சீலிங் ஃபேனை வேகமாக வைத்தால் மின்சார கட்டணம் அதிகரிக்குமா.? உண்மை என்ன.?

    சீலிங் ஃபேனை வேகமாக வைத்தால் மின்சார கட்டணம் அதிகரிக்குமா.? உண்மை என்ன.?

    வீட்டு உபயோக பொருட்கள்
    இனி பஸ் பாஸ் தேவையில்லை சீருடை போதும்... மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன போக்குவரத்து துறை!!

    இனி பஸ் பாஸ் தேவையில்லை சீருடை போதும்... மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன போக்குவரத்து துறை!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இரண்டாம் தகுதி சுற்றுக்கு முன்னேறியது மும்பை அணி... 20 ரன் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி!!

    இரண்டாம் தகுதி சுற்றுக்கு முன்னேறியது மும்பை அணி... 20 ரன் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி!!

    கிரிக்கெட்
    இந்தோனேசியா கல் குவாரியில் பாறை சரிவு... 13 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு!!

    இந்தோனேசியா கல் குவாரியில் பாறை சரிவு... 13 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு!!

    உலகம்
    இனி பஸ் பாஸ் தேவையில்லை சீருடை போதும்... மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன போக்குவரத்து துறை!!

    இனி பஸ் பாஸ் தேவையில்லை சீருடை போதும்... மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன போக்குவரத்து துறை!!

    தமிழ்நாடு
    ராஜ்யசபா எம்.பி சீட் விவகாரம்... எடப்பாடி பழனிசாமியுடன் எல்.கே.சுதீஷ் திடீர் சந்திப்பு!!

    ராஜ்யசபா எம்.பி சீட் விவகாரம்... எடப்பாடி பழனிசாமியுடன் எல்.கே.சுதீஷ் திடீர் சந்திப்பு!!

    அரசியல்
    நீட் மட்டும் தான் உலகமா? சர்ச்சையில் சிக்கிய விஜய்... வலுக்கும் கண்டனங்கள்!!

    நீட் மட்டும் தான் உலகமா? சர்ச்சையில் சிக்கிய விஜய்... வலுக்கும் கண்டனங்கள்!!

    அரசியல்
    வேகமெடுக்கும் கொரோனா.. மீண்டும் மாஸ்க்..! பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!!

    வேகமெடுக்கும் கொரோனா.. மீண்டும் மாஸ்க்..! பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share