ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். வழக்கறிஞர் வில்சன், சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு ராஜ்ய சபா சீட் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் கழக வேட்பாளர்களாக போட்டியிடவுள்ள வழக்கறிஞர் வில்சன், சல்மா மற்றும் சேலம் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் சிவலிங்கம் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மாநிலங்களவை தேர்தலில் தேமுதிக என்ன செய்யும்.? 'பொறுமை'யாக பதில் சொன்ன பிரேமலதா விஜயகாந்த்.!!

இத்தேர்தலில் வென்று, முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டின் குரலை மாநிலங்களவையில் அவர்கள் எதிரொலிக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஓரிடம்..? அதிமுக வழங்குமா.? நயினார் சொல்வது என்ன?