அன்புமணிக்கும் ராமராஸுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. பாமகவை பங்கு போடும் வகையில் நிர்வாகிகளை ராமதாஸ் நீக்குவதும், அடுத்த பத்து நிமிடத்தில் அன்புமணி நீக்கப்பட்ட நிர்வாகிகளை இணைப்பதும் என சர்ச்சையை கிளப்பும் சம்பவங்கள் நிகழ்ந்தது. தொடர்ந்து பாமகவை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் ஏராளமானூர் இருவரையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே நேற்று ராமதாஸ் மற்றும் அன்புமணியின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இந்த நிலையில் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்த பிறகு அக்கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பேச்சுவார்த்தை முன்னேற்றத்தின் அறிகுறி தான் ராமதாஸ் - அன்புமணியன் சந்திப்பு என கூறினார்.
இதையும் படிங்க: பஞ்சாயத்து செய்யக் கூடியவர்கள் அம்பலம்... பாமக-வை சாடிய திருமாவளவன்!!

சமாதான பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ஒற்றுமையை மட்டும் தான் நான் எதிர்பார்க்கிறேன் என்றும் தெரிவித்தார். மேலும், இருவரது உறவில் முன்னேற்றம் இருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சி தருவதாகவும் விரைவில் நல்ல செய்தியை ராமதாசே அறிவிப்பார் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: மூடப்பட்ட கதவு, ரவுண்ட் கட்டிய குடும்பத்தினர்... தைலாபுரத்திற்கு பெரிய கும்பிடு போட்ட அன்புமணி...!