ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே பாலகிருஷ்ணன் என்ற பாமக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பாமக பிரமுகரான பாலகிருஷ்ணனை மர்ம கும்பல் ஒன்று வழிமறித்துள்ளது.

தொடர்ந்து பாலகிருஷ்ணனை சரமாரியாக பட்டாக்கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் பாலகிருஷ்ணன் சரிந்த நிலையில் அங்கிருந்து அந்த கும்பல் ஓடி உள்ளது. இந்த சம்பவம் பாமகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஐயா சீக்கிரமே குணமாகி வாங்க..! ஜி.கே மணியை நேரில் சென்று நலம் விசாரித்த சீமான்..!

ஏற்கனவே கடந்த 11 ஆம் தேதி சக்கரவர்த்தி என்ற பாமக நிர்வாகி கொலை செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒரு பாமக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொலை செய்யப்பட்ட பாலகிருஷ்ணன் வேலூர் மாவட்ட பாமக அமைப்புச் செயலாளர் கிருஷ்ணனின் உறவினர் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டார் முதல்வர் ஸ்டாலின்.. கடுமையாக சாடிய அன்புமணி.. ஏன் தெரியுமா?