சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வயதான பெண்களை தாக்கி செயின் பணம் உள்ளிட்ட வழிப்பறியில் ஈடுபட்ட நரேஷ் என்ற வாலிபரை சங்ககிரி போலீசார் கைது செய்யும் போது தப்பி ஓடியவரை வலது காலில் துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர்.
கடந்த 20ம் தேதி அன்று தீவட்டிப்பட்டி அருகே சரஸ்வதி என்ற வயதான மூதாட்டியை மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது கொடூரமாக கொலை செய்து கொள்ளையடித்த நரேஷ் குமார் 26 S/o. ராஜா, கட்டி காரநூர், ஓமலூர் என்பவர் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

சங்ககிரி அருகே மலை அடிவாரத்தில் பதுங்கி இருந்த இவரை பிடிக்கச் சென்ற போலீசாரை கத்தியால் வெட்டியதில் உதவி ஆய்வாளர் விஜயராகவன் மற்றும் காவலர் செல்வகுமார் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. எனவே மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் அவரை கத்தியை போட்டு விட்டு சரணடைமாறு கூறியும் கேட்காததால் அவரது வலது காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளார்.

இதையும் படிங்க: காதலர்களை துளைத்த துப்பாக்கி தோட்டா! இஸ்ரேல் ஊழியர்கள் மீது காசா ஆதரவாளர் நிகழ்த்திய கொடூரம்..!
இவர் மீது இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு மல்லூர் பகுதியில் வயதான பெண்ணை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த குற்றவாளி வயதான ஆடு மாடு மேய்க்கும் பெண்களையும் வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகளையும் குறிவைத்து கொடூரமாக தாக்கி கொள்ளையடிக்கும் வழக்கம் கொண்டவர்.

கொரோனா சமயத்தில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இவர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய வழக்கும், போலீசாரை கொலை மிரட்டல் விடுத்த வழக்கும், நீதிமன்றத்திற்கு வழிகாவல் செய்த போலீசாரை மிரட்டிய வழக்கம் இவர் மீது உள்ளது
இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு 7ம் ஆண்டு நினைவு நாள்.. மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி..!