சென்னை மாநகராட்சியில் ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்கள், நகரின் தூய்மையைப் பராமரிக்கும் முக்கியப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தினந்தோறும் குப்பைகளை அகற்றுதல், தெருக்களைச் சுத்தம் செய்தல், பாதாள சாக்கடைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்கின்றனர். இருப்பினும், இவர்களின் பணி நிலைமைகள், ஊதியம், மற்றும் பணி பாதுகாப்பு ஆகியவை நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
சென்னை மாநகராட்சியில் ஏற்கெனவே தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், பெருங்குடி, அடையார், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட 11 மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியாரிடம் வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகர் ஆகிய மண்டலங்களிலும் குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் வழங்க மாநகராட்சி சார்பில் கருத்துகேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: தமிழக உரிமைக்குரலே முரசொலி! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…
குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைத்து வேலைவாய்ப்பை பறிக்கக் கூடாது, நிரந்தரப் பணி வழங்க வேண்டும், ஊதிய உயர்வு ஆகியவற்றை வலியுறுத்தி ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. ஆறு கட்டங்களாக இதுவரை பேச்சுவார்த்தை நடந்த நிலையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் இன்று நடந்த ஏழாவது கட்டம் பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளது.
பணி நிரந்தரம், தனியார்மயம் கூடாது என தூய்மை பணியாளர்கள் 10 நாட்களாக ரிப்பன் மாளிகையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அரசு தரப்பின் ஏழாவது பேச்சு வார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது.
தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, ஆணையர் குமரகுருபரன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமல் அப்புறப்படுத்துவதிலேயே அரசு குறியாக இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இனி ரூ.25,000-லாம் வேண்டாம்.. வெறும் ரூ.2,500 போதும்.. தமிழக அரசு அறிமுகப்படுத்திய சூப்பர் திட்டம்..!!