டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த மாா்ச் மாதம் அமலாக்கத் துறை திடீா் சோதனை செய்தது. அப்போது சோதனையின் முடிவில், டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நிகழ்ந்திருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்தது. மேலும், இது தொடா்பாக பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் விசாகன் உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே இந்த சோதனை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக்கோரி டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
இதையும் படிங்க: சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஆகாஷ் பாஸ்கரன்.. விசாரணை வளையத்தில் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன்..!

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து டாஸ்மாக் வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில், டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமலாக்கத் துறை அனைத்து விதிகளையும் மீறுகிறது, வரம்புமீறி செயல்படுகிறது. முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனிநபர்கள் மீது விசாரிக்கலாம், ஒட்டுமொத்த நிறுவனத்தையும் நீங்கள் எப்படி விசாரிக்கலாம்? டாஸ்மாக் அரசு சார்ந்த நிறுவனமாகும். தனி நபர்கள் செய்த விதிமீறலுக்காக ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் விசாரிப்பதா? என்று பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க: அமலாக்கத்துறை கையில் சிக்கிய குடுமி..! 2 நாள் ரெய்டால் ஆட்டம் காணும் டாஸ்மாக் ஊழல்..!