தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற கோரிக்கையை வலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இந்தப் போராட்டம் 16 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் ஒரு நீதிக்கான போராட்டம். குறிப்பாக, 2025 டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய தொடர் போராட்டம் சென்னையில் தீவிரமடைந்து, 2026 ஜனவரி தொடக்கத்திலும் நீண்டு வருகிறது.
இந்தப் பிரச்சினையின் அடிப்படை 2009ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதிக்கு முன்பு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் தொடர்புடையது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் எண்.311-இல் தெளிவாக வாக்குறுதி அளித்தது. வாக்குறுதி படி, சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.

இடைநிலை ஆசிரியர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது. நல்ல முடிவு எட்டப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்து இருந்த நிலையில் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை தொடருவோம் என்று திட்டவட்டமாக இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர். தங்கள் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தங்களை கொலை குற்றவாளிகள் போல நடத்துவதாகவும், நாங்கள் என்ன தவறு செய்தோம் என்றும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இதையும் படிங்க: ஊதிய உயர்வு வேண்டாம்... பணி நிரந்தரம்தான் வேண்டும்..! பகுதி நேர ஆசிரியர்கள் தொடர் போராட்டம்..!
இதனிடையே நேற்று சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் அருகே இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 400 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதி இன்றி கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என்னென்ன கோரிக்கைகள்? ஆசிரியர்களுடனான பேச்சுவார்த்தையை தொடங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்..!