தமிழ்நாட்டில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக கள் இறக்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் முழுமையான தடை உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக, TASMAC-ன் மூலம் விற்கப்படும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் சாராயத்தின் வருவாயைப் பாதுகாக்கும் நோக்கம் இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாட்டில் கள் இறக்குவதற்கு அனுமதி கோரி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பெரியதாழை பகுதியில் பனை மரம் ஏறி கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தப் போராட்டம், தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்றது.
இதையும் படிங்க: சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!!

இந்த போராட்டத்தை நடத்த விடக்கூடாது என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில், சீமானின் சட்டவிரோத கள் இறக்கும் போராட்டத்தை’ தடை செய்ய காவல்துறை தவறியது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

சட்ட விதிமுறைகளை மீறி ’கள் ஓர் உணவு’ என தவறான பிரச்சாரம் செய்யும் சீமான் மற்றும் சட்டவிரோதமாக பெரியதாழையில் ’கள்’ இறக்கியதுடன், அரிவாளை எடுத்துத் தூக்கிக் காட்டி காவல்துறைக்குக் கொலை எச்சரிக்கை செய்த சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது 24 மணி நேரத்திற்குள் உரிய வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கூறினார். அவர்கள் கைது செய்யப்படவில்லையெனில், தமிழ்நாடு எங்கும் புதிய தமிழகம் கட்சி சார்பாக கடும் போராட்டம் வெடிக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: போட்டாரு ED.. ஓடி வாரேன் மோடி! உதய(நிதி)யை விடுவியுங்க.. சீமான் செம்ம கலாய்..!