தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி வருகிறார். இதனால் அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தால் என்ன ஆட்சி அமையும் என்பதே கேள்வி குறியாகி உள்ளது. இந்த நிலையில் கூட்டணி ஆட்சி விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார்.

கூட்டணி ஆட்சி என்பது குறித்து எடப்பாடி பழனிச்சாமி தான் அதற்கான விளக்கத்தை தெளிவு ஏற்படுத்த வேண்டும் என்றும் பாஜக தலைமையில் கூட்டணியா அல்லது அதிமுக தலைமை கூட்டணியா என்ற கேள்வியும் எழுகிறது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெரியாரை அவதூறு செய்ததற்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன்? விஜய்க்கு திருமாவளவன் கேள்வி!!

கூட்டணி குறித்து அறிவிக்க வேண்டியவர் யார்., உள்துறை அமைச்சராக இருக்கலாம், பாஜக எங்களுக்கு தலைவர்களில் ஒருவராக இருக்கலாம் ஆனால் தமிழ்நாட்டை பொருத்தவரை சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு உருவாக்கி இருக்கும் இந்த கூட்டணியை தலைமை வகித்து வழி நடத்துவது எடப்பாடி பழனிச்சாமியா அல்லது அமித்ஷாவா என்று கேள்வி எழுந்துள்ளது என தெரிவித்தார். இதற்கெல்லாம் அவர்தான் பதில் சொல்ல வேண்டும் அல்லது விளக்கம் அளிக்க வேண்டும் என கூறினார்.

முன்கூட்டியே கூட்டணி அறிவிக்க வேண்டிய அழுத்தம் அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ளது என்றும் அதற்கான பின்னணியை அதிமுக தான் விளக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சிக்குள் நடக்கும் பிரச்சனையில் மேற்கொண்டு கருத்து சொல்ல எதுவும் இல்லை., எங்களைப் பொறுத்தவரை நாங்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தொடர்கிறோம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: விநாயகர் தமிழ் கடவுள் இல்லையா? அது முருக பக்தர்கள் மாநாடே இல்லை... கடுமையாக சாடிய திருமாவளவன்!!