திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரப்பாக்கத்தில் கடந்த 12ம் தேதி 8 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து பாட்டி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு நபர் அவரை பின்தொடர்ந்து சென்று கடத்தி அருகிலுள்ள தோப்பில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இந்த கொடூரச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. சிறுமி தப்பி, தனக்கு நேர்ந்த கொடுமையை பாட்டியிடம் தெரிவித்ததை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, காவல்துறையினர் ஏற்கனவே இரண்டு தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மேலும் 4 கூடுதல் தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.
இதையும் படிங்க: 7 மணி நேர போராட்டம்.. அணைக்கப்பட்ட தீ..!! இத்தனை கோடி மதிப்பிலான டீசல் நாசமா..!!
புகைப்படம், வீடியோ ஆதாரங்கள் இருந்தும், 10 நாட்கள் கடந்தும் குற்றவாளியை பிடிக்க முடியாமல் திணறிய போலீசார், இவ்வழக்கு விசாரணைக்கு உதவியாக, மர்ம நபரை அடையாளம் காணவும், துப்பு துலக்கவும் பயனுள்ள குறிப்பிடத்தக்க மற்றும் நம்பகமான தகவல்கள் தருவோருக்கு 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என தெரிவித்தனர்.
மேலும் குற்றவாளியின் புகைப்படத்தை போட்டு, 4 மொழிகளில் போஸ்டர் தயாரித்து ஆங்காங்கே ஒட்டப்பட்டது. அந்த போஸ்டரில் 9952060948 என்ற செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே கடும் அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை விரைந்து பிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து 13 நாட்களுக்கும் மேலாக குற்றவாளி தேடப்பட்டு வந்த நிலையில், இன்று குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். சூலூர்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை தனிப்படை போலீசார் பிடித்துள்ளனர். பிடிபட்ட இளைஞரின் புகைப்படத்தை பாதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீசார் காட்டினர்.
தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபர் இவர்தான் என சிறுமி அடையாளம் காட்டவே, அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். அவர் மனநலம் பாதித்தவரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காலையிலேயே அதிர்ச்சி..! பற்றி எரியும் ரயில்.. சூழ்ந்த கரும்புகை.. நடந்தது என்ன..?