தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக அமைதியான முறையில் நடைபெற்றது. மக்களின் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தி பெரும் எண்ணிக்கையில் வாக்காளர்கள் தங்கள் விருப்பத்தைப் பதிவு செய்திருந்தனர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (EVM) மூலம் பதிவான வாக்குகள் விரைவாக எண்ணப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி, தவெக பல்வேறு தொகுதிகளில் கணிசமான முன்னிலையில் உள்ளது. பல இடங்களில் தவெக வேட்பாளர்கள் வலுவான இடைவெளியுடன் முன்னுக்கு வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்ற கட்சிகளின் நிலைமை குறித்த விரிவான தகவல்கள் அடுத்தடுத்த சுற்றுகளில் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் இந்தத் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்புடன் காணப்பட்டது. பல முக்கிய பிரச்சினைகள் – வேலைவாய்ப்பு, விவசாயம், தொழில்துறை வளர்ச்சி, கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்டவை – தேர்தல் பிரச்சாரத்தின் மையமாக இருந்தன. அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வாக்காளர்களை ஈர்க்க முயன்றன. தேர்தல் ஆணையம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்குப்பதிவை சீராக நடத்தியது.
இதையும் படிங்க: #TNElectionResults2026: சொந்த தொகுதியில் முத்திரை பதிக்கும் அதிமுக பொதுச்செயலாளர்! எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை!
எண்ணிக்கை மையங்களில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையின் ஒவ்வொரு சுற்று முடிவும் உடனுக்குடன் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. இறுதி முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் தமிழகத்தின் அடுத்த அரசியல் போக்கை தீர்மானிக்கும் என்பதால் அனைத்துத் தரப்பினரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
இதன்படி
த.வெ.க. - 85
தி.மு.க. - 49
அ.தி.மு.க. - 67
நா.த.க. - 0
இதையும் படிங்க: #BREAKING: #TNElectionResults2026..! தவெக முதலிடம்..!! திமுகவை பின்னுக்கு தள்ளி சாதனை..!!