டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக கடந்த வாரம் இரண்டு நாட்கள் முழுவதும் அமலாக்க துறை அதிகாரிகள் சென்னையில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் ஈடுபட்டனர். குறிப்பாக டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாளர் விசாகன் வீட்டில் சோதனை நடந்தினர். அப்போது அவரின் வீட்டின் அருகே டாஸமாக் தொடர்பான வாட்ஸ் உரையாடல் நகல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
அதில் டாஸ்மாக் தொடர்பான ஒப்பந்தம், டெண்டர் குறித்து தகவல்கள் இடம்பெற்று இருந்தனர்.மேலும் தொழிலதிபர் ரத்தீஷ் அவர்களிடம் பேசிய உரையாடல் இருந்தது. மேலும் இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதனை தொடர்ந்து டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாளர் விசாகனை அழைத்து சென்ற அமலாக்க துறை அதிகாரிகள் சுமார் 6 மணிநேர விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. தற்போது இந்த மூவரையும் அமலாக்கத்துறை தேடி வருவதாக கூறப்படும் நிலையில், இவர்களுடைய ஆடம்பர வாழ்க்கை, நைட் பார்ட்டி ரகசியங்களை திருச்சி சூர்யா உடைத்துள்ளார்.

திருச்சியைச் சேர்ந்த முக்கியபுள்ளி ஒருவர் மூலமாக உதயநிதி ஸ்டாலினுக்கு பழக்கமான இவர்கள் மூவரும், நார்மலான மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், தற்போது ரோல்ஸ் ராய்ஸ் கார், நடிகைகளுடன் நைட் பார்ட்டி, 300 கோடியில் ஈசிஆர் பங்களா என வலம் வரும் அளவிற்கு அபார வளர்ச்சி அடைய பினாமி காசே காரணம் என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக ரத்தீஷ் பற்றி பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். ரத்தீஷ் உடைய அண்ணன் ஐஏஎஸ் ஆபீசர் என்றும், தமிழகத்தில் 16,17 மாவட்டங்களில் ஐஏஎஸ் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளை உதயநிதி ஸ்டாலின் உதவியுடன் நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரத்தீஷ் எங்கே..?? லண்டன் கூட்டி சென்ற அந்த VIP யார்? பகீர் தகவல்..!
மேலும் அளவுக்கு அதிகமாக பணம் புரள்வதை யாரும் கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காகவே சினிமா துறைக்குள் ரத்தீஷ் காலடி எடுத்து வைத்ததாகவும், அங்கு அனிருத், விக்னேஷ் சிவன், அட்லி ஆகிய மூன்று பேருடன் சேர்ந்து கொண்டு போடாத ஆட்டம் போட்டதாகவும் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள ஒரு குறிப்பிட்ட பப்பிற்கு ரத்தீஷ் உடன் இந்த மூவரும் அடிக்கடி செல்வார்கள் என்றும், அப்படி அவர்கள் செல்வதற்கு முன்னதாகவே 4, 5 காஸ்ட்லி கார்களில் 15 முதல் 20 கல்லூரி மாணவிகள் வந்து இறங்குவதை நானே பார்த்திருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த கல்லூரி மாணவிகள் பிரபலங்களுக்கு விருந்தாக்கப்பட்டதாகவும், அவ்வப்போது புதுசு, புதுசாக மாணவிகளை இந்த வேலைக்கு பயன்படுத்தியதாகவும் பகீர் கிளப்பியுள்ளார்.

ஒரு மாதத்திற்கு முன்பு கூட பார்ட்டி செலப்ரேட் பண்ணாங்க, 40 பிரபலமான நடிகைகள் கலந்துக்கிட்டாங்க, அவர்களுக்கு ரிட்டன் கிப்டாக லூயிஸ் வேல்யூ வயட்டால ஒரு ஹேண்ட் பேக் கொடுத்தாங்க. அந்த பேக் விலை 40 முதல் 45 லட்சம் ரூபாய் இருக்கும். இவங்க கொடுத்த ஒரு பேக் காசுக்கு சென்னையில் ஒரு வீடே வாங்கிடலாம் என அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: பொறியில் சிக்கிய எலியாக அமைச்சர் அன்பில் மகேஸ்.. ஹெச்.ராஜாவின் பகீர் குற்றச்சாட்டு.!!