தமிழக அரசியலில் தற்போது அதிமுக தமிழக வெற்றிக் கழகம் இடையே ஏற்பட்டுள்ள மோதல் கடுமையான விமர்சனங்களாக வெளிப்பட்டு வருகிறது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தவெக தலைவர் விஜய் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். குறிப்பாக கரூர் நிகழ்வு தொடர்பான சம்பவத்தையும் வரி ஏய்ப்பு விவகாரத்தையும் சுட்டிக்காட்டி விஜயை "ஊழல்வாதி" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, விஜய் ஊழல்வாதி என்பதற்கு நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளது என்று கூறினார். வரி ஏய்ப்பு செய்ததே அதற்கு சாட்சி என்றும், அது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்டது என்றும் தெரிவித்தார். மேலும் விஜய் கட்சி தொடங்கிய பிறகு நடந்த சம்பவங்களை சுட்டிக்காட்டி, 72 நாட்கள் வரை வெளியே வராமல் இருந்தது, கட்சி அலுவலகத்தை மூடிவிட்டு ஓடியது போன்றவற்றை குறிப்பிட்டு அவரை கேலி செய்தார்.

"விஜய்க்கு நாட்டில் என்ன நடக்கிறது என்று ஒன்றுமே தெரியவில்லை" என்றும், "அவர் டிவி கூட பார்ப்பதில்லை, மக்களை சந்திப்பதில்லை" என்றும் கூறி அவரது அரசியல் அனுபவமின்மையை விமர்சித்தார். இது ஊழல் சக்தி என்று விஜய் மறைமுகமாக சாடியதற்கு பதிலடியாக அமைந்தது.
இதையும் படிங்க: அட விடுங்கப்பா.! விஜயை எந்த நாட்டுக்கு முதல்வர் ஆக்கப் போறாரு செங்கோட்டையன்? செல்லூர் ராஜு கேள்வி..!
இந்த நிலையில் விஜய் குறித்து விமர்சனம் செய்த எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு குளிர் செயலாளர் அருண்ராஜ் பதிலடி கொடுத்தார். எதை வைத்து ஊழல் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார் என்று கேள்வி எழுப்பினார். ஊழல் தடுப்புச் சட்டம் என்றால் என்ன என்று அவருக்கு தெரியுமா என்று கேட்டார். அரசு பதவிகளில் இல்லாத ஒருவர் மீது ஊழல் என்று கூறுவது சரியா என்றும் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு இது கூடவா தெரியாது என்று கேட்டார்.
இதையும் படிங்க: சேப்பாக்கத்தில் விசிலுக்கு தடை? எங்களுக்கு எந்த சம்மதமும் இல்ல... போலீசை கைகாட்டிய கிரிக்கெட் வாரியம்..!