தமிழக வெற்றிக்கழகத்தின் கொடிக்கு எதிராக தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தலைவர் பச்சையப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கின் தொடக்கம் தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை என்ற அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் பச்சையப்பன் என்பவரால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதுடன் தொடங்குகிறது. இந்த அமைப்பு, தமிழக அரசின் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்ட ஒரு அறக்கட்டளையாக செயல்பட்டு வருகிறது. இவர்களது கூற்றுப்படி, சிவப்பு-மஞ்சள்-சிவப்பு நிறங்களைக் கொண்ட ஒரு கொடியை 2023ஆம் ஆண்டு உருவாக்கி, அதற்கு வர்த்தக முத்திரை உரிமையைப் பெற்றுள்ளனர். இந்த வர்த்தக முத்திரைப் பதிவின் அடிப்படையில், இந்த அமைப்பு மட்டுமே குறிப்பிட்ட நிறங்களைக் கொண்ட கொடியைப் பயன்படுத்த உரிமை உள்ளதாக வாதிடுகிறது. ஆனால், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம், 2024ஆம் ஆண்டு தங்கள் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியபோது, அதில் இதே சிவப்பு-மஞ்சள்-சிவப்பு நிறங்களைப் பயன்படுத்தியதாக மனுதாரர் குற்றஞ்சாட்டினார்.
இதனால், தவெக கட்சியின் கொ15 நிறங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், தங்கள் கொடியை தவறாகப் பயன்படுத்தியதற்காக 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், தங்கள் அமைப்பின் கொடியைப் பயன்படுத்துவது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று வாதிட்டார். இதற்கு நீதிபதி, வர்த்தக முத்திரை உரிமை பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், அது ஒரு அரசியல் கட்சியின் கொடிக்கு எவ்வாறு பொருந்தும் என்றும் கேள்வி எழுப்பினார். இந்த வாதங்களை அடுத்து, நீதிபதி தவெக கட்சி மற்றும் அதன் தலைவர் விஜய் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி, இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணைக்கு வந்த போது, வாதங்களைக் கேட்ட நீதிபதி, சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடியை பயன்படுத்த தமிழக வெற்றி கழகத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையும் படிங்க: கூட்டம் வந்துட்டா ஜெயிச்சுட்டதா அர்த்தமா?... விஜயை கலாய்த்த ஆர். எஸ். பாரதி...!
மனுதாரர் கொடியை ஒப்பிடும்போது தமிழக வெற்றி கழகத்தின் கொடி முற்றிலும் மாறுபட்டது என்று தமிழக வெற்றி கழகத்தின் தரப்பில் வாதிடப்பட்டது. இரு கொடிகளை ஒப்பிடும்போது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் என கூற முடியாது என நீதிபதி தெரிவித்தார். இந்த நிலையில், தவெக கொடிக்கு தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை மேல்முறையீடு செய்தது. இதற்கு 6 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என விஜய்க்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதையும் படிங்க: இதோ வந்துட்டாங்க-ல! கரூரில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி அளிப்பதில் சிக்கல்…!