நடிகர் விஜய் கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை தொடங்கினார். 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என சொல்லிக்கொண்டிருக்கும் அவர் கடந்த சில ஆண்டுகளாகவே மக்களை கவரும் வகையில் பல்வேறு செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் 3 இடங்கள் பிடித்த மாணவ, மாணவிகளை தொகுதி வாரியாக அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி ஊக்கத்தொகையும் வழங்கி கவுரவித்தார்.

2022-2023 கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய், 2023 -2024 கல்வியாண்டில் அதிக மதிப்பெண்களுடன் முதலிடத்தை பிடித்த மாணவ மாணவிகளுக்கு வைர மோதிரங்களை பரிசாக வழங்கி மேடையில் அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார்.
இதையும் படிங்க: பச்சை பொய், சுய தம்பட்டம்.. செயல் திறன் அற்ற அவல ஆட்சி.. முதலமைச்சரை வறுத்தெடுத்த விஜய்..
மாணவ, மாணவியர்களை விஜய் ஊக்கப்படுத்திய சம்பவம் ஒரு பக்கம் அரசியல் நிகழ்வாக பார்க்கப்பட்டாலும், மறுபக்கம் இந்திய அளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் 3வது ஆண்டாக, இந்த ஆண்டும் 2024 -2025 கல்வியாண்டில் தொகுதிவாரியாக முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டும் வகையில் கல்வி விருது விழா வழங்க முடிவு செய்துள்ள விஜய் அதனை இரு கட்டங்களாக நடத்த திட்டமிட்டுள்ளார்.

அதன்படி முதற்கட்டமாக மாமல்லபுரத்தில் உள்ள 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஹோட்டலில் கடந்த 30ம் தேதி தவெக சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அதில் தமிழகத்தில் 18 மாவட்டங்களை சேர்ந்த 88 தொகுதிகளில் 600 மாணவ, மாணவிகளுக்கு தவெக தலைவர் விஜய் கல்வி விருது வழங்கி கௌரவித்தார்.

இந்நிலையில், தவெக சார்பில் 2ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா நாளை நடைபெறுகிறது. மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெறும் இந்த விழாவில் 10 மற்றும் 12 வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த 84 தொகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு தவெக தலைவர் விஜய் பரிசு, ஊக்கத்தொகை, சான்றிதழ் வழங்கி கௌரவிக்கிறார்.
இதையும் படிங்க: திமுகவா? தவெகவா? எத்தனை சீட்டு? நேரம் வரட்டும் சொல்கிறேன்! திருமா ட்விஸ்ட் பேச்சு..!