சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் சேகர் பாபு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாராஜன் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் டில்லி பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சேகர்பாபு அவர்களது கேள்விக்கு பதில் அளித்தார்.
சென்னை மாநகராட்சி வார்டு 37 இல் உதயசூரியன் நகரில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து அறிந்த உடன் அந்த பகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் மாநகராட்சி கவுன்சிலர் டில்லி பாபு அவர்களும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று பொது மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர். சட்டமன்ற உறுப்பினர் சார்பாக உடனடியாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

இன்றைக்கு ரூபாய் 8000 ரூபாயும் 10 கிலோ அரிசி வேட்டி புடவை உள்ளிட்ட பொருட்கள் அரசு சார்பாக வழங்கப்பட்டுள்ளது. திமுக சார்பாக 42 ஆயிரம் ரூபாய் ரொக்கமாகவும் 26 கிலோ அரிசி மற்றும் மாற்று உடைகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த இடம் என்பது தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு சொந்தமானது அங்கு 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றனர். இந்த 400 குடும்பங்களுக்கும் நிரந்தர குடியிருப்பை ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கையை முதலமைச்சர் எடுப்பார் என்று சேகர்பாபு கூறினார்.
இதையும் படிங்க: நேற்று முளைத்த காளான்! பச்சா இன் பாலிடிக்ஸ்.. விஜயை தொடர்ந்து தாக்கும் திமுக அமைச்சர்கள்..!
தமிழக வெற்றிக் கழக நிர்வாகி தாக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, இந்த விவகாரத்தில் உண்மை இருப்பின் முதலமைச்சர் இன்னார் இனியவர் என்று பார்க்க மாட்டார் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என்று கூறினார். அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பான தீர்ப்பு அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி என்கிறார்களே என்ற கேள்விக்கு,

ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமிக்கு பச்சை பொய் பழனிச்சாமி என பெயர் வைத்துள்ளோம். அவர் வாயில் வந்ததை எல்லாம் சொல்கிறார் என்னதான் நீதிமன்றத்தின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் அதற்கு அரசு போதிய ஒத்துழைப்பு அளித்ததால் தான் இந்த தீர்ப்பு கிடைத்துள்ளது.
எஸ்.ஐ.டி என்பது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை தான் முறையாக செலுத்தி முறையாக விசாரணை செய்தனர். அரசு வழக்கறிஞரும் சேர்ந்து ஐந்தாண்டு இழுத்தடிக்கப்பட்ட பொள்ளாச்சி சம்பவம் போன்று இல்லாமல் ஐந்து மாதங்களில் தீர்ப்பு வந்திருக்கிறது.

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சிதான் நடைபெறுகிறது என்பது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது முதலமைச்சரை பாராட்ட மனமில்லை என்றாலும் வசை பாடுவதை தவிர்த்தால் குற்ற சம்பவங்களை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு ஊக்கமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
எஃப்.ஐ.ஆர் வெளியிட்டது தமிழக காவல்துறை தான். அப்படி இருக்கிறவர்களுக்கு எப்படி பாராட்டு தெரிவிக்கிறீர்கள்? என விஜய் கேள்வி எழுப்புகிறார் என்ற கேள்விக்கு, பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு,
விஜய் ஜம்முக்கலத்திலும் தார்ப்பாயில் வடிகட்டின பொய்யை பேசிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே சொல்லிவிட்டேன் அரசியலில் எதிர் கருத்துக்கள் அவர் மீது வரவேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட நாகரீகமற்ற வார்த்தைகளை பயன்படுத்தி வருகிறார். யாரோ எழுதிக் கொடுக்கும் அறிக்கையை அவர் வெளியிடுகிறார். அவரது ஒவ்வொரு வரிக்கும் பதில் சொல்ல நாங்கள் தயாராக இல்லை. நாங்கள் மக்களை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

2026 களத்திற்கு வரட்டும் மக்கள் அப்போது என்ன தீர்ப்பை வழங்குகிறார்கள் என்று சொல்லட்டும். முதலமைச்சர் 24 மணி நேரமும் ரவுண்ட் த கிளாக் போல உழைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இவர் ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்யவில்லை மக்களோடு கூட்டணி வைத்து மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம் பாஜகவின் பி டீம் ஆக நாங்கள் செயல்படவில்லை என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
இதையும் படிங்க: குடும்பத்துக்குள்ளயே வெட்டு, குத்து நடக்குது..! இதுல படுத்துக்கிட்டே எப்படி ஜெயிப்பீங்க ; சேகர்பாபு விமர்சனம்..!