கல்வியில் மாணவ, மாணவிகளின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார்.

விஜய் கையினால் பரிசு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மாணவ, மாணவிகள் பலர் நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு முதல்கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இதையும் படிங்க: நாளை மாணவர்களை சந்திக்கிறார் விஜய்..! 2ம் கட்ட கல்வி விருது விழா..!

இன்று 2ஆம் கட்டமாக கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து மாமல்லபுரத்திற்கு விஜய் புறப்பட்டு சென்றார். மாமல்லபுரத்தில் தனியார் மண்டபத்தில் கல்வி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது.
இதையும் படிங்க: அடிபொலி! இளைய காமராஜரா விஜய்? சீமான் கொடுத்த அல்டிமேட் ரியாக்ஷன்...