மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் நகை திருட்டு விசாரணைக்காக அழைத்துச் சொல்லப்பட்ட போது உயிரிழந்தார். அஜித் குமாரின் மரணம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் காவல்துறை மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அஜித் குமாருக்கு நீதி கேட்டு அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்தன. இதேபோல் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பிலும் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டும் காவல் மரணங்களால் உயிரிழந்த 24 பேரின் குடும்பத்தினருக்கு நீதி வழங்க கூறியும், வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சென்னை சிவானந்தா சாலையில் நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கலந்து கொண்டார். அரசியல் கட்சி தொடங்கிய பிறகு முதன்முறையாக போராட்டக் களத்திற்கு வந்த விஜய், கருப்பு நிற உடை அணிந்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

சாரி வேண்டாம், நீதி வேண்டும் என்ற பதாகை கைகளில் ஏந்தியபடி விஜய் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். இதனை எடுத்துப் போராட்டத்தில் உரையாற்றிய விஜய், திமுக அரசுக்கு பல்வேறு கேள்விகளை முன் வைத்தார். அஜித் குமார் மரணத்திற்கு மன்னிப்பு கேட்ட முதல்வர், காவல் மரணங்களால் உயிரிழந்த 24 பேரில் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்காதது ஏன் என்றும் அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கிய முதல்வர் இந்த 24 பேரில் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்ட போது இது தமிழ்நாடு காவல்துறைக்கு அவமானம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதாகவும் தற்போது நீங்கள் உத்தரவிட்டதற்கு பெயர் என்ன சார் என்றும் கேட்டார். அன்று நீங்கள் சொன்னதும் இன்று நடப்பதும் சிபிஐ தானே என்று கேள்வி எழுப்பியுள்ள விஜய், எதற்காக இப்படி ஒளிந்து கொள்கிறீர்கள் என்றும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பு வேண்டும் என வலியுறுத்தப்பட்டதால் மத்திய ஆட்சிக்குப் பின் ஒளிந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: முதன் முறையாக போராட்டக் களத்தில் விஜய்... கருப்பு நிற உடையில் பங்கேற்பு..!
இதையும் படிங்க: சீப்பை மறைத்தால் கல்யாணம் நிக்குமா.. தவெக தொண்டர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தம்! கடும் குற்றச்சாட்டு..!